II. ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் லீலைத் தலங்கள்

4. சித்த பகுலா

நோக்கங்கள் :

நோக்கம் 1: சித்த பகுலாவின் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது.

நோக்கம் 2: சித்த பகுலாவுடன் தொடர்புடைய முக்கிய பக்தர்களை அறிதல்.

நோக்கம் 3: சித்த பகுலாவுடன் தொடர்புடைய முக்கிய லீலைகளை விளக்குதல்.

நோக்கம் 4: உள்ளே காலியான மரத்தின் அதிசயத்தையும் அதன் அர்த்தத்தையும் விளக்குதல்.

நோக்கம் 1: சித்த பகுலாவின் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது

சித்த பகுலா என்பது இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் உள்ள புரி நகரில் அமைந்துள்ள ஒரு புனிதமும் வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்த தலம் ஆகும். இது ஹரிதாஸ தாகூர் மற்றும் சைதன்ய மகாபிரபுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதால், கௌடிய வைஷ்ணவ சமயத்தில் முக்கியமான தலமாக கருதப்படுகிறது.

இந்த இடத்துடன் தொடர்புடைய பக்தர்கள்

நோக்கம் 2: சித்த பகுலாவுடன் தொடர்புடைய முக்கிய பக்தர்களை அறிதல்.

Kashi Mishra:
காசி மிஸ்ரா – சித்த பகுலா, காசி மிஸ்ராவின் வீட்டின் பின்னால் அமைந்துள்ளது.

ஸ்ரீல ஹரிதாஸ தாகூர் :
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஸ்ரீல ஹரிதாஸ தாகூர் அவர்களுக்கு இங்கு தங்க ஏற்பாடு செய்தார். சித்த பகுலா என்பது ஹரிதாஸ தாகூரின் பஜன குடில் ஆகும். அவர் தினமும் 3,00,000 கிருஷ்ண நாமங்களை ஜபித்த இடம் இதுவாகும்.

ரூப கோஸ்வாமி :
இவர் இந்த மரத்தின் கீழ் “லலிதா மாதவ” மற்றும் “விதக்த மாதவ” ஆகியவற்றை ஸ்ரீ கௌரங்கர் மற்றும் அவரது பக்தர்களின் முன்னிலையில் பாராயணம் செய்தார்.

சனாதன கோஸ்வாமி :
இவர் இங்கு தங்கி இருந்தபோது ஹரிதாஸ தாகூருடன் வாழ்ந்தார்.

லீலைகள்

நோக்கம் 3: சித்த பகுலாவுடன் தொடர்புடைய முக்கிய லீலைகளை விளக்குதல்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஹரிதாஸிடம் கூறினார்:
“நீ இங்கு தங்கி ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஜபித்துக்கொண்டிரு. நான் தினமும் உன்னைச் சந்திக்க இங்கே வருவேன். அமைதியாக இங்கு தங்கி, ஜகந்நாதர் கோயிலின் மேல் உள்ள சக்கரத்தை பார்த்து வணங்குவாய். உனக்கு தேவையான பிரசாதத்தை நான் ஏற்பாடு செய்து அனுப்புவேன்.”

ஹரிதாஸ தாகூருக்கு நிழல் அளிப்பதற்காக, ஸ்ரீ சைதன்யர் ஜகந்நாதரின் பயன்படுத்தப்பட்ட பல் தூரிகையை நட்டு வைத்தார். அது உடனே வளர்ந்து ஒரு பெரிய நிழல் தரும் மரமாக மாறியது.

ஹரிதாஸ தாகூர் இங்கேயே பரமபதம் அடைந்தார். அப்போது சைதன்யர் ஆனந்த பரவசத்தில் இங்கு நடனம் ஆடினார்.

காலியான மரம் (மரப்பொந்து)

நோக்கம் 4: உள்ளே காலியான மரத்தின் அதிசயத்தையும் அதன் அர்த்தத்தையும் விளக்குதல்.

காலப்போக்கில், ஒரிசா மன்னன் ஜகந்நாதரின் ரதயாத்திரை தேரை உருவாக்க இந்த மரத்தை வெட்ட உத்தரவிட்டார். அந்த தேர்கள் சுமார் 13 மீட்டர் உயரம் கொண்டவை; மேலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர்கள் கட்டப்படுகின்றன.

அதனால் அதிகாரிகள் மரத்தை வெட்ட வந்தனர். ஆனால் ஸ்ரீல ஜகந்நாத கோஸ்வாமி எதிர்த்து, இந்த மரம் சைதன்ய மகாபிரபுவால் ஹரிதாஸ தாகூருக்கு நிழல் அளிக்க நட்டது என்று கூறினார். ஆனால் அவர்கள் அதை ஏற்காமல் மறுநாள் வெட்ட முடிவு செய்தனர்.

அந்த இரவு, மரம் உள்ளே காலியாக(பொந்தாக) மாறியது. அதன் தண்டு மட்டும் இருந்தது; உள்ளே வெறுமையாக இருந்தது.
மறுநாள் அதிகாரிகள் வந்தபோது, மரம் காலியாக இருப்பதை கண்டு அதை வெட்டாமல் திரும்பிச் சென்றனர்.

இந்த மரம் சாதாரணமானது அல்ல. இது ஜகந்நாதரின் பல் தூரிகையாக பயன்படுத்தப்பட்டது; பின்னர் மகாபிரபுவின் கரங்களால் நட்டப்பட்டது. மேலும் நாமாசார்யர் ஸ்ரீல ஹரிதாஸ தாகூருக்கு தங்கும் இடமாக இருந்தது.

இந்த மரம் “சித்த” நிலையை அடைந்தது. அதன் பின்னர் அது “சித்த பகுலா” என அழைக்கப்பட்டது.

மக்கள் இந்த கல்பதரு (விருப்பங்களை நிறைவேற்றும் மரம்) மீது கற்களை கட்டி தங்கள் வேண்டுதல்களை செய்கிறார்கள்.

கோயில் திறப்பு நேரம்

கோயில் பொதுவாக தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.

விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் நேரம் மாறக்கூடும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare