IV. பூரியில் உள்ள புனித திருக்கோயில்கள் மற்றும் மடங்கள்
4. ஹனுமான் திருக்கோயில்கள்
e. பதே ஹனுமான் திருக்கோயில்
நோக்கங்கள்
நோக்கம் 1: புரியில் உள்ள பதே ஹனுமான் கோயிலின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்வது.
நோக்கம் 2: அந்த கோயிலின் வரலாறு மற்றும் கட்டடக்கலை ரீதியான முக்கியத்துவத்தை ஆராய்வது.
நோக்கம் 3: நைவேத்யம் எவ்வாறு சமர்ப்பிக்கப்படுகிறது? மற்றும் என்னென்ன வழிபாடுகள் நடைபெறுகின்றன?என்பதை அறிந்து கொள்வது.
நோக்கம் 1: புரியில் உள்ள “பதேஹனுமன்” கோயிலின் முக்கியத்துவத்தை ஆராய்தல்.
அறிமுகம்:
பதே ஹனுமன் (அல்லது பாதே மஹாவீர் என்றும் அழைக்கப்படுகிறார்),
ஸ்ரீ ஜகன்னாத கோவில் வளாகத்தின் முக்கிய பகுதியில், குறிப்பாக
சிம் ம த் வா ரா (சிங்க நுழைவாயில் / கிழக்கு நுழைவாயில்) பகுதியில் அமைந்துள்ள, புரி நகரத்தின் முக்கியமான பாதுகாப்பு தெய்வங்களில் ஒருவர்.
” பதே ” என்ற சொல்லின் பொருள்: “பதே ” என்ற சொல், “வெற்றி” அல்லது “திறமை” என்று நேரடியான பொருள் கொண்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள், இது வெற்றி, தடைகளை நீக்குதல் மற்றும் தீய சக்திகளை வெல்வதற்கான ஒரு முழுமையான அடையாளமாகக் கருதுகின்றனர்.
தலைமை தெய்வங்கள்:
சிங்க நுழைவாயிலின் இடதுபுற சுவரில், பதே ஹனுமானின் சிறிய ஆனால் அழகான சிலை உள்ளது. அந்த கோயிலுக்குள் நுழையும்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் முதலில் சந்திக்கும் தெய்வமே பதே ஹனுமான்தான்.
பதே ஹனுமான் முதன்மையான மிகப் புனிதமான நுழைவாயிலைப் பாதுகாக்கும் தெய்வமாவார்.
நோக்கம் 2: அந்தக் கோயிலின் வரலாறு மற்றும் கட்டடக்கலை ரீதியான முக்கியத்துவத்தை ஆராய்வது.
வரலாற்று முக்கியத்துவம்:
கோயிலின் வரலாற்றுப் பதிவுகளின்படி, ” பதே ” என்ற பெயர், ஒடிசா மாநிலத்தின் “கஜபதி ” அரசர்கள் ஆட்சி காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ஒடிசா அரசர்கள் தென்னிந்திய பகுதிகளையோ அல்லது வடநாட்டு சுல்தான்களையோ போர்களில் வெற்றி பெற்ற பிறகு, முதலில் “சிங்க நுழைவாயிலி ல்”-பிரார்த்தனை செய்தனர். அங்கு அமைக்கப்பட்ட அனுமனின் சிலை, இந்த இராணுவ வெற்றிகளுடன் அடையாளப்படுத்தப்பட்டது.
வரலாற்று ரீதியாக, புரி பலமுறை வெளிநாட்டுப் படையெடுப்புகளுக்கு உள்ளாகி, படையெடுப்பாளர்கள் கோயிலை சேதப்படுத்த முக்கிய ‘சிங்க நுழைவாயிலை’குறிவைத்தனர். ‘பாிகை’ (ஒடிசாவின் பாரம்பரிய போர்வீரர் குழுக்கள்) மீது வீரத்தை தூண்டும் வகையில், பதேஹனுமான் சிலையை நுழைவாயிலில் நிறுவியிருந்தனர்.
அவர் வரலாற்று ரீதியாக, ஒரு பிராந்தியத்தின் பாதுகாவலராக கருதப்படும் க்ஷேத்ர பால மஹாவீர் என்று அழைக்கப்படுகிறார்.
நோக்கம் 3.போக அல்லது பிரசாதம் எப்படி அர்ப்பணிக்க ப்படுகிறது? மற்றும் வெவ்வேறு சடங்குகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன? என்பதை அறிதல்.
மஹா பிரசாதம்:
பதே ஹனுமான் மட்டுமே, ஆனந்த பஜாருக்குள் நுழையும் போது, அந்த புனிதமான உணவை தினமும் கவனித்துக் கொள்ளும் ஒரே காவலர் ஆவார்.
அவரது தினசரி பூஜைகள் , சேவயாத்துக்களால் ஒவ்வொரு காலையும் நடத்தப்படும் “த்வார பாலக பூஜை” என்ற முக்கியமான பூஜையுடனேயே நடத்தப்படுகின்றன.
போக அர்ப்பணிப்பு:
பதே ஹனுமனுக்கு அர்ப் பணிக்கப்படுபவை , ஜகன்னாதரின் சமையலறையில் தயாரிக்கப்பட்டவை.
அவர், ஜகன்னாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டப் பிறகு, கோயிலின் சமையலறையில் தயாரிக்கப்படும் அன்றாட உணவில் இருந்து ஒரு பகுதியைப் பெறும் சில தெய்வங்களில் ஒருவர்.
உலர் தன்மையுள்ள பிரசாதங்கள் (சுகிலா போகா) பக்தர்கள், அவருக்கு தொடர்ச்சியாக உகுதா (இனிப்புச் சோறு), கோரா (தேங்காய் இனிப்புகள்) மற்றும் கடலைமாவு லட்டு ஆகியவற்றை அர்ப்பணிக்கிறார்கள்.
வெற்றிலை பாக்கு அல்லது தாம்பூலம் சமர்ப்பித்தல்: இது, இறைவனின் அயராத தூதராகவும், பாதுகாவலராகவும் உள்ள அவருக்கு மரியாதை செய்யும் வகையில் சமர்பிக்கப்படுகிறது.
தினசரி பூஜை மற்றும் வழிபாடுகள் :
ஜகன்னாத கோயில் பிரதான வாயில்கள் திறக்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு நாளும், பூசாரிகள் வாயிலில் ஒரு புனித -ப்படுத்தும் சடங்கை செய்கிறார்கள். இந்த நேரத்தில், “பதே ஹனுமானை ” வணங்குவதன் மூலம், அன்றைய வழிபாடுகளைத் தொடங்க அனுமதி பெறப்படுகிறது .
சிந்தூர் லகி அல்லது சிந்தூர காப்பு : அந்த சிலையின் மீது, மல்லிகை எண்ணெயுடன் கலந்த தூய சிந்தூர் தொடர்ச்சியாக தடவப்படுகிறது; இதனால் அந்த சிலை, ஒரு வீரனின் உருவத்தில், அழகாகத் தோன்றுகிறது.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை: இந்த இரண்டு நாட்களிலும், மாலை நேரத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஜகன்னாதர் ஆலயத்திற்குள் நுழையும் முன், ஹனுமான் சாலிஸாவை ஓதுவதற்காக, ஏராளமான மக்கள் அங்கே கூடுகிறார்கள்.
தர்ஷன் நேரங்கள்:
பதே ஹனுமனுக்கு தனி நுழைவாயில் இல்லை; அதாவது, முக்கிய கோயில் திறக்கப்படும் எந்த நேரத்திலும், பதே ஹனுமனையும் அணுக முடியும்.
தினசரி தரிசன நேரம்: காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.
தரிசனம் செய்ய ஏற்ற நேரம்: காலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை ( மற்றும் மங்கள ஆரத்தி நேரத்தில்). மேலும், மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை, மாலை நேர வழிபாடுகள் நடைபெறும் நேரத்திலும் தரிசனம் செய்யலாம்.
இருப்பிடம் மற்றும் வரைபடம்:
அது ஜகன்னாத் கோயில் வளாகத்தில் உள்ளது.

