10. ஜகத் ஷிரோமணி கோயில், ஆமேர்

நோக்கங்கள்:

நோக்கம் 1: ஜகத் ஷிரோமணி கோவிலின் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது.

நோக்கம் 2: ஜகத் ஷிரோமணி கோவிலின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பை ஆய்வு செய்வது.

நோக்கம் 3: ஜகத் ஷிரோமணி கோவிலுடன் தொடர்புடைய கதைகள் மற்றும் புராணங்களை அறிதல்.

நோக்கம் 1: ஜகத் ஷிரோமணி கோவிலின் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது.

ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ஆமேரின் ஜகத் ஷிரோமணி கோயில், மீராபாய் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆமேரின் அழகான மற்றும் சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் “ராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்” என்று யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த கோயில் 1599ஆம் ஆண்டில் கட்ட தொடங்கப்பட்டு, கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆயின. இது மகாராஜா மான் சிங் I அவர்களின் மூத்த மகன் ஜகத் சிங்கின் நினைவாக அவரது தாய் ராணி கனக்வதி கட்டியதாகும்.

வரலாறு:
ஜகத் ஷிரோமணி கோயில் ஆமேரின் உள்ளூர் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கோயிலில் கிருஷ்ணரின் விக்ரஹம் நிறுவப்பட்டுள்ளது. மத சாஸ்திரங்களின்படி, இது மீராபாய் வழிபட்ட கிருஷ்ணரின் அதே விக்ரஹத்ம் என்று நம்பப்படுகிறது.

மேவார் அரசுடன் முகலாயர்கள் யுத்தம் நடந்தபோது, ஆமேர் அரசர்கள் இந்த விக்ரஹத்தை பாதுகாத்து அழிவிலிருந்து காப்பாற்றி, ஆமேருக்கு கொண்டு வந்து இந்த கோயிலில் நிறுவினர். அவரது பக்தியை நினைவுகூறும் விதமாக, மீராபாய் விக்ரஹமும் கிருஷ்ணருடன் சேர்த்து நிறுவப்பட்டுள்ளது.

மீராபாய் ஒரு ராஜபுட் இளவரசி; அவர் ராஜா போஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும், தன்னுடைய முழு வாழ்க்கையையும் கிருஷ்ண பக்திக்கு அர்ப்பணித்தார். பல பஜன்கள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார்.

கோயிலின் அமைப்பு:
இந்த கோயிலில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. முக்கிய நுழைவாயில் ஆமேரின் கோட்டை சாலையின் வழியாக இருக்கிறது. மற்றொரு வழி, ஆமேர் கோட்டையிலிருந்து படிக்கட்டுகள் வழியாக சென்றால் கோயிலை அடையலாம்.

ஆமேரில் உள்ள ஜகத் ஷிரோமணி கோயிலுக்கு செல்லும் வழி

நோக்கம் 2: ஜகத் ஷிரோமணி கோவிலின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பை ஆய்வு செய்வது.

ஜகத் ஷிரோமணி கோயிலின் மிகவும் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்று அதன் மார்பிள் தோரணங்கள் (Torans) ஆகும். இந்த தோரணங்கள் என்பது வாயிலின் அலங்கார வளைவுகள் ஆகும்.இந்த தோரணங்கள் ஒரே மார்பிள் கல்லில் இருந்து செதுக்கியவை எனப்படுகிறது – இது ஒரு வியக்கத்தக்க ஆச்சரியம்! இத்தகைய தோரணங்கள் சாதாரணமாக ஜைன கோயில்களில் காணப்படும்.
அமேரின் ஜகத் ஷிரோமணி கோயிலின்
நுழைவாயிலை அலங்கரிக்கும் தோரணம்

ஜகத் ஷிரோமணி கோயிலின் இன்னொரு சிறப்பம்சம் அதன் பல கட்டிடக்கலை அம்சங்கள் ஒன்றோடொன்று இணைந்து அமைந்திருப்பது – ஜைன, இந்து, மொகலாய, மற்றும் தென்னிந்திய பாணிகள் அனைத்தும் இங்கு அழகாக கலந்து கட்டப்பட்டுள்ளது.
இந்த வகை கட்டிடக்கலை ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகத்தை நினைவுபடுத்தும். அங்கு பல கட்டிடக்கலை பாணிகள் இணைக்கப்பட்டு ஒரு அழகிய படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆமேரில், ஜெய்ப்பூரிலுள்ள ஜகத் ஷிரோமணி கோயிலின்
வெளிப்புற மேற்பரப்பை அழகான சிற்ப வேலைப்பாடுகள்
அலங்கரிக்கின்றன.

ஜகத் ஷிரோமணி கோயில் மூன்று வகையான கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது:
● உள்ளூர் கல் (ஒரு வகையான மணற்கல்)
● மார்பிள் கல்
● கருப்புக் கல் ( கிரானைட்)
இந்த பலவகை கற்களின் கலவை கோயிலின் அழகையும் தனித்துவத்தையும் அதிகரிக்கிறது. இதற்கு அருகிலுள்ள கோயில்கள் அனைத்தும் ஒரே கல்லை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன.

சுமை தூக்கும்  ஒரு பெண், வீணை வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர் மற்றும்
ஒட்டகத்தில் பயணம் செய்யும் மக்கள்ஆகியவற்றை காட்டும்
சிற்பங்கள்.

ஜகத் ஷிரோமணி கோயிலின் வெளிப்புற தோற்றம்.

நோக்கம் 3 : ஜகத் ஷிரோமணி கோவிலுடன் தொடர்புடைய கதைகள் மற்றும் புராணங்களை அறிதல்.

இந்த கோயில் ஸ்ரீ விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹம் மற்றும் அவரது பக்தையாகிய மீராபாய் அவர்களது விக்ரஹமும் உள்ளன. மீராபாய், மேவார் அரசரின் மனைவியாக இருந்தாலும், அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தையாக இருந்தார்.

இந்த கோயிலில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹம், 600 ஆண்டுகளுக்கு முன்பு மேவார் நாட்டில் மீராபாய் வழிபட்ட அதே விக்ரஹம் என்று கூறப்படுகிறது.

முகலாயர் மேவாரில் நடத்திய தாக்குதலில் இந்த விக்ரஹங்களை அழிக்கப்படாமல் ஆமேரின் அரசர்கள் பாதுகாத்து, ஆமேருக்கு கொண்டு வந்தனர்.

ஜெய்ப்பூரின் ஜகத் ஷிரோமணி கோயில் விக்ரஹங்கள்

ஜகத் ஷிரோமணி கோயில் ஆம்பர்

ஆமேரில் உள்ள ஜகத் ஷிரோமணி கோயிலின்
மேல்மாடத்தில் அழகான சிற்ப வேலைப்பாடுகள்

கோயிலுக்கு அடுத்துள்ள ஒரு மண்டபத்தில், விஷ்ணு பகவானின் வாகனமான கருடரின் விக்ரஹம் அமைந்துள்ளது.

ஜகத் ஷிரோமணி கோயிலின் நுழைவாயிலுடன்
இணைந்துள்ள ஒரு மேல்மாடத்தின் படம்.

இந்த கோயிலின் சுவர்கள், குறிப்பாக அதன் அடித்தளப் பகுதி மற்றும் கருடரை அடங்கிய மண்டபம், அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

ஜகத் ஷிரோமணி கோயிலின் விவரங்கள்:
● அடித்தளத்தில் விளையாட்டு மனநிலையில் இருக்கும் இரண்டு யானைகள் காணப்படுகின்றன.
● இரண்டாவது வரிசையில், மக்கள் மற்றும் ஊர்வலங்கள் மகிழ்ச்சியான நிலையிலுள்ளவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
● மேல்தர வரிசையில், பறவைகள் (மயில்கள்) செதுக்கப்பட்டுள்ளன.
● அடித்தளத்துக்கு மேலே மூன்று மார்பிள் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன, அதில் இந்திய இதிகாச கதாபாத்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறக் கற்கள் ஒன்றிணைந்து ஜெய்ப்பூரில் உள்ள ஜகத் ஷிரோமணி கோயிலில் கண்களுக்குப் பரவசம் தரும் அழகை உருவாக்குகின்றன.

ஜகத் ஷிரோமணி கோயிலின் மற்றொரு தோற்றக் காட்சி.

மற்ற சிறப்புகள்:
● ஜகத் ஷிரோமணி கோயில் என்பது வரலாறு, கட்டிடக்கலை மற்றும் ஆன்மீக பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
● இது மீராபாய் விக்ரஹம் அமைந்த ஒரே கோயிலாக கருதப்படுகிறது.
● இந்திய தொல்லியல் துறை (ASI) இந்த கோயிலை பாதுகாத்து பராமரித்து வருகிறது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare