விரி மழைக் குலம் கிழித்து
விரி மழைக் குலம் கிழித்தொளிரும் மின் என,
கரு நிறத்து அரக்கியர் குழுவில், கண்டனன்—
விரி மழைக் குலம் கிழித்தொளிரும் மின் என,
கரு நிறத்து அரக்கியர் குழுவில், கண்டனன்–
குரு நிறத் தொருதனிக் கொண்டல் ஊழியான்
குரு நிறத் தொருதனிக் கொண்டல் ஊழியான்
இரு நிறத்து உற்ற வேற் கியைந்த காந்தத்தை.
இரு நிறத்து உற்ற வேற் கியைந்த காந்தத்தை.
மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பிதால்;
மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பிதால்;
ஆவதே; அரவணைத் துயிலின் நீங்கிய
ஆவதே; அரவணைத் துயிலின் நீங்கிய
தேவனே அவன்; இவள் கமலச்செல்வியே.
தேவனே அவன்; இவள் கமலச்செல்வியே.
புனை கழல்இராகவன் பொன் புயத் தையோ ?
வனி தையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ ?
புனை கழல்இராகவன் பொன் புயத் தையோ ?
வனி தையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ ?
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும்
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும்
சனகர் தம்குலத்தையோ ? யாதைச் சாற்றுகேன் ?
சனகர் தம்குலத்தையோ ? யாதைச் சாற்றுகேன் ?
வாழி ஜானகி ! வாழி இராகவன் !
வாழி நான்மறை! வாழியர் அந்தணர் !
வாழி ஜானகி ! வாழி இராகவன் !
வாழி நான்மறை! வாழியர் அந்தணர் !
வாழி நல் அறம்!’ என்று உற வாழ்த்தினான்-
வாழி நல் அறம்!’ என்று உற வாழ்த்தினான்-
ஊழிதோறும் புதிதுறும் கீர்த்தியான்.
ஊழிதோறும் புதிதுறும் கீர்த்தியான்.
வாழி ஜானகி ! வாழி இராகவன் !
வாழி நான்மறை! வாழியர் அந்தணர் !
வாழி ஜானகி ! வாழி இராகவன் !
வாழி நான்மறை! வாழியர் அந்தணர் !
வாழி நல் அறம்!’ என்று உற வாழ்த்தினான்-
வாழி நல் அறம்!’ என்று உற வாழ்த்தினான்
ஊழிதோறும் புதிதுறும் கீர்த்தியான்.
ஊழிதோறும் புதிதுறும் கீர்த்தியான்.
ஊழிதோறும் புதிதுறும் கீர்த்தியான்.
ஊழிதோறும் புதிதுறும் கீர்த்தியான்.
ஸ்ரீ ராம் ஜெய ராம், ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெய ராம், ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெய ராம், ஜெய ஜெய ராம்
ஹரே கிருஷ்ணா

