பகவத் கீதை 9.15 – பாடத் தொகுப்பு
ஸ்லோகம்
ஜ்ஞான -யக்ஞேன சாப்-யன்யே
யஜந்தோ மாம் உபாஸதே
ஏகத்வேன ப்ருதக்த்வேன
பஹுதா விஷ்வதோ-முகம்
சொல் பொருள்
| சம்ஸ்கிருதம் | பொருள் |
| ஜ்ஞான-யஜ்ஞேன | அறிவை விருத்தி செய்து கொள்வதால் |
| ச | மேலும் |
| அபி | நிச்சயமாக |
| அன்யே | பிறர் |
| யஜந்த | அர்ப்பணித்து |
| மாம் | என்னை |
| உபாஸதே | வழிபடுகின்றனர் |
| ஏகத்வேன | ஒருமையில் |
| ப்ருதக்த்வேன | இருமையில் |
| பஹுதா | பன்மையில் |
| விஷ்வத முகம் | விஸ்வரூபத்தில் |
மொழிபெயர்ப்பு
ஞான யாகத்தில் ஈடுபட்டிருக்கும் பிறர், பரம புருஷரை, தன்னிகரற்றவராகவும், பலரில் வேறுபட்டவராகவும், விஸ்வ ரூபத்திலும் வழிபடுகின்றனர்.
குறிக்கோள்
ஞானத்தின் மூலம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை தன்னிகரற்றவராகவும், பலரில் வேறுபட்டவராகவும், விஸ்வ ரூபத்திலும் — மக்கள் எவ்வாறு வணங்குகின்றார்கள் என்பதை ஆராய்வது.
நோக்கங்கள்
- பக்தி–சேவையில் ஜ்ஞானத்தின் பங்கினை ஆராய்ந்து காண்பது.
- சிலர் ஞானத்தை வளர்த்துக் கொண்டு யஜ்ஞத்தை (தியாகத்தை) எப்படிச் செய்கிறார்கள் என்பதை ஆராய்தல்.
- ஏகத்வ–தத்துவத்தின் மூலம் பரம புருஷரைப் பக்தியுடன் போற்றும் அணுகுமுறையைப் புரிந்து கொள்வது.
- பகவானைத் தனித்தவராகவும் அல்லது பலவிதமாகவும் பக்தியுடன் போற்றும் அணுகுமுறையைப் பரிசீலித்து புரிந்து கொள்வது.
- விஸ்வரூபத்தில் வெளிப்படும் பகவானைப் பக்தியுடன் எவ்வாறு வணங்குவது என்பதை ஆராய்தல்.
- பக்தியின் எல்லா அணுகுமுறைகளும் முடிவில் ஸ்ரீகிருஷ்ணரிடமே ஒன்றிணைகின்றன என்பதை அறிதல்.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முறை
- அறிவை யஜ்ஞமாக அர்ப்பணித்தல் – படித்தலும் கல்வியும் ஸ்ரீ கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கே நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு அறிவு பக்தியாக மாற்றப்படுகிறது.
- பல்வேறு வழிப்பாடுகளை மதித்தல் – மக்கள் பகவானை பலவிதமான முறைகளில் அணுகுகிறார்கள் என்பதை உணர்ந்து, அவ்வாறு அணுகுவோர் எல்லோரையும் மரியாதையுடன் மதிக்க வேண்டும். ஆனால், அந்த எல்லாப் பாதைகளிலும், திவ்யமான மற்றும் பரிபூரணமான மார்க்கம் — பக்தி — என்பதைக் கட்டாயம் மனதில் நிலைநிறுத்த வேண்டும்.
- விஸ்வரூபத்தை ஆழமாக சிந்தித்தல் – பிரபஞ்சத்தில் வெளிப்படும் பகவானின் விஸ்வரூபத்தை ஆழமாக சிந்திப்பதால் அவரது மகத்துவம், பேரழகு மற்றும் பரிபூரண குணங்களை மேலும் ஆழமாக உணர்ந்து மதிப்பதை ஏற்படுத்தும்.
- தனிப்பட்ட பக்தியை பின்பற்றுதல் – அநுபவமற்ற முறைகள் மற்றும் மறைமுக அணுகுமுறைகளுக்கு அப்பால், பக்தி மூலம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நேரடி சேவை செய்வதை நோக்கமாகக் கொள்ளுங்கள். இப்படியான நேரடி பக்தி-சேவையே, பரமபுருஷனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது.
எளிய சுருக்கம்
பகவான் ஸ்ரீகிருஷ்ணரை ஞானத்தின் மூலம் சிலர் தன்னிகரற்றவராகவும், பலரில் வேறுபட்டவராகவும், விஸ்வ ரூபத்திலும் வழிபடுகின்றனர். அனைத்துப் பாதைகளும் இறுதியில் அவரிடமே சென்று சேரும். ஆனாலும், பகவானுக்கே நேரடியாக அர்ப்பணித்து செய்யப்படும் சுத்த-பக்தியே உயர்ந்தது; அதுவே பரமபுருஷனுடன் ப்ரேமை மிகுந்த நெருங்கிய இணைப்பை ஏற்படுத்துகிறது.

