29. விஷ்ராம் காட்

நோக்கங்கள்:

நோக்கம்1: யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள புனிதத் தலமான விஷ்ராம் காட் எனும் படித்துறையின் வரலாற்றுப் புகழையும் அங்கு நிகழ்ந்த தெய்வீக நிகழ்வுகளையும் விளக்குவது.

நோக்கம்2: வ்ரஜ மண்டல பரிக்ரமாவின் சூழலில், விஷ்ராம் காடுடைய வழிபாட்டு முறைகளையும் ஆன்மிக முக்கியத்துவத்தையும் விளக்குவது.

நோக்கம்3: விஷ்ராம் காட் சுற்றுப்புறத்தில் உள்ள சிறப்புடைய கோவில்களை விவரித்து, அவற்றின் கலாச்சார முக்கியத்துவத்தை ஆராய்வது.

நோக்கம்4: கம்சனை வென்ற பின் பகவான் கிருஷ்ணர் இங்கு ஓய்வு கொண்ட தெய்வீக லீலைகளையும், விஷ்ராம் காட் தொடர்பான பிரபு சைத்தன்யரின் யாத்திரையையும் விவரிப்பது.

நோக்கம்5: யம-த்விதீயா (பாய் தூஜ்) எனும் பண்டிகையின் ஆன்மீக மகத்துவத்தை விஷ்ராம் காட் சார்ந்து ஆராய்ந்து விளக்குவது.

நோக்கம்6: விஷ்ராம் காட் தரிசனம் மற்றும் வழிபாட்டு முறைகளை பின்பற்றுவதால் கிடைக்கும் ஆன்மீக நன்மைகளை விளக்கும் மதுரா மஹாத்ம்யத்தின் குறிப்புகளை அடையாளம் காணுவது.

நோக்கம்7: விஷ்ராம் காட்-ஐ அதன் நவீன முகவரி மற்றும் டிஜிட்டல் வரைபட கருவிகளின் உதவியால் புவியியல் ரீதியாக கண்டறிதல்.

நோக்கம்1: யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள புனிதத் தலமான விஷ்ராம் காட் எனும் படித்துறையின் வரலாற்றுப் புகழையும் அங்கு நிகழ்ந்த தெய்வீக நிகழ்வுகளையும் விளக்குவது.

வரலாறு மற்றும் கண்ணோட்டம்

யமுனை நதிக்கரையில், மதுராவில் அமைந்துள்ள விஷ்ராம் காட் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும்.

“விஷ்ராம்” என்ற பெயருக்கு “ஓய்வு” என்று பொருள். இது அசுர அரசன் கம்சனை வதம் செய்த பிறகு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஓய்வு எடுத்த இடத்தை குறிக்கிறது.

பூமாதேவியை பாதாளத்திலிருந்து உயர்த்திய பின், வராகப் பெருமான் இந்த மலைப்பகுதியில் ஓய்வெடுத்து, பூமாதேவியிடம் ஆதி வராஹ புராணத்தையும் உபதேசித்துயிருக்கிறார். (சிந்தாமணி தாம்)

விஷ்ராம் காட் யமுனை நதியின் முக்கியமான நீராடும் படித்துறை ஆகும். கி.பி. 1515 ஆம் ஆண்டு, ஸ்ரீ சைத்தன்ய மகாபிரபு முதன்முறையாக மதுராவுக்கு வந்த பொழுது, கிருஷ்ணரின் பிறப்பிடத்தை தரிசிக்கச் செல்லும் முன், விஷ்ராம் காட்டில் தீர்த்தஸ்நானம் செய்திருக்கிறார். (வ்ரஜ மண்டல பரிக்ரமா).

இந்த புனித இடம் உலகளவில் “விஸ்ராந்தி தீர்த்தம்” எனப் புகழ்பெற்றுள்ளது.

யமுனை நதிக்கரையில் விஷ்ராம் காட்

நோக்கம்2: வ்ரஜ மண்டல பரிக்ரமாவின் சூழலில், விஷ்ராம் காடுடைய வழிபாட்டு முறைகளையும் ஆன்மிக முக்கியத்துவத்தையும் விளக்குவது.

உரையும் வழிபாட்டு முக்கியத்துவமும்

விஷ்ராம் காட் என்பது ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வ்ரஜ மண்டல பரிக்ரமாவைத் தொடங்கி முடிக்கும் இடம், இதுவே அவர்களின் யாத்திரை நிறைவடையும் இடமாகவும் விளங்குகிறது.

பக்தர்கள் இங்கு ஸ்நானம் செய்து, ஆசமனம் (புனித நீரைச் சிறிது அருந்துதல்) செய்து, யாத்திரையை ஆரம்பிப்பதற்கு முன் விரதங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்தக் காட் ஆன்மீக ரீதியில் “விஷ்ராந்தி தீர்த்தம்” எனப் போற்றப்படுகிறது. மதுரா மஹாத்மியம் போன்ற வேத சாஸ்திரங்களில் இது மீண்டும் மீண்டும் “ஓய்வின் புனிதத் தீர்த்தம்” எனப் குறிப்பிடப்பட்டுள்ளது. “அனைத்து புனிதத் தலங்களையும் தரிசித்து வந்த பின், சாதுக்கள் விஷ்ராந்தி தீர்த்தத்தில் ஓய்வெடுக்கின்றனர்.” (மதுரா மஹாத்மியம் 225)

வ்ரஜ மண்டல பரிக்ரமா – விஷ்ராம் காட்

நோக்கம்3: விஷ்ராம் காட் சுற்றுப்புறத்தில் உள்ள சிறப்புடைய கோவில்களை விவரித்து, அவற்றின் கலாச்சார முக்கியத்துவத்தை ஆராய்வது.

ஸ்ரீ யமராஜ்-யமுனா கோவில்

யமராஜ்-யமுனா கோவில் அல்லது யம்-யமுனா கோவில் மதுராவில் உள்ள விஷ்ராம் காட் அருகே அமைந்துள்ளது, குறிப்பாக துவாரகாதீஷ் கோயிலுக்குச் செல்லும் படிகளில், இது விஷ்ராம் காட் அருகே உள்ளது. ஸ்ரீ யமுனா தர்மராஜ் கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த தனித்துவமான கோவில், யமன் மற்றும் யமுனைக்கிடையிலான அண்ணன்–தங்கை பந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவில்

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி கோவில், ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிடமான, மிகவும் புனிதமான மற்றும் வணங்கத்தக்க இடங்களில் ஒன்றாகும். இந்த வளாகத்தில் ‘கர்ப்ப கிருஹா’ என்று அழைக்கப்படும் ஒரு சிறை அறையில், கொடுங்கோலன் மன்னன் கம்சனால் அடைக்கப்பட்டிருந்த வசுதேவருக்கும் தேவகிக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறக்கிறார். பிரதான கோவில் கிருஷ்ணரின் அழகிய உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் உள்ளே இருக்கும் சூழல் அமைதியானதும் மற்றும் பக்தி நிறைந்ததுமாக மனதைக் கவரும் வகையில் காணப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமியிலிருந்து விஷ்ராம் காட் சுமார் 2–3 கிலோமீட்டர் தூரம் ஆகும்.

துவாரகாதீஷ் கோவில்

துவாரகாதீஷ் கோவில் விஷ்ராம் காட் அருகே அமைந்துள்ளது. இந்த கோவிலில், கிருஷ்ணர் துவாரகாவின் ராஜாவாக தோற்றமளிக்கிறார். விஷ்ராம் காட்டில் இருந்து துவாரகாதீஷ் கோவிலுக்கு தூரம் சுமார் 200 மீட்டர்கள் ஆகும்.

நோக்கம்4: கம்சனை வென்ற பின் பகவான் கிருஷ்ணர் இங்கு ஓய்வு கொண்ட தெய்வீக லீலைகளையும், விஷ்ராம் காட் தொடர்பான பிரபு சைத்தன்யரின் யாத்திரையையும் விவரிப்பது.

லீலைகள் மற்றும் புனித நிகழ்வுகள்

கம்சனின் தோல்விக்குப் பிறகு கிருஷ்ணரின் ஓய்வு

கம்சனைக் கொன்ற பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் இறுதிச் சடங்குகளை துருவக் காட்டில் செய்தார், பின்னர் விஷ்ராம் காட்டில் நீராடி, அங்கு தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஓய்வெடுத்தார்.

சைதன்ய மகாபிரபுவின் யாத்திரை

அஷ்வின மாதத்தில் (செப்டம்பர் 1515), சைதன்ய மகாபிரபு மதுராவிற்கு வந்து, முதலில் விஷ்ராம் காட்டில் நீராடிய பின்னர் கிருஷ்ண ஜன்மஸ்தான் மற்றும் கேசவதேவ் கோயிலுக்குச் சென்றார். யமுனை நதிக்கரையோரத்தில் உள்ள 24 புனித படித்துறைகளிலும் நீராடினர்.

நோக்கம்5: யம-த்விதீயா (பாய் தூஜ்) எனும் பண்டிகையின் ஆன்மீக மகத்துவத்தை விஷ்ராம் காட் சார்ந்து ஆராய்ந்து விளக்குவது.

யம-த்விதீயா பண்டிகை (பாய் தூஜ்)

கார்த்திகையில் அமாவாசை இரவுக்குப் பிறகு இரண்டாவது நாளான யம-த்விதீயா (அல்லது பாய் தூஜ்) திருநாளில், தொலைதூர இடங்களிலிருந்து பக்தர்கள் மோட்சம் பெறுவதற்காக விஷ்ராம் காட்டில் நீராட வருகிறார்கள்.

புராணக் கதையின்படி:

யமுனா தேவி, தன் பிறந்தநாளன்று தன் அண்ணன் யமராஜனை விருந்துக்கு அழைத்தார்.
மகிழ்ச்சியடைந்த யமராஜர், இந்த நாளில் நம்பிக்கையுடன் யமுனையில் நீராடும் எவரும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுவார்கள் என்று வரம் அருளினார்.

ஸ்ரீ யமுனையில் எங்கும் ஸ்நானம் செய்வது புனிதமாக இருந்தாலும், அதைவிட பிரஜ மண்டலத்தில் ஸ்நானம் செய்வதே சிறப்பு; அதிலும் குறிப்பாக யம-த்விதீயா நாளில் விஷ்ராம் காட் படித்துறையில் ஸ்நானம் செய்வது அதீத மகிமையுடையதாகும்.”
— ஸ்ரீ வ்ரஜ மண்டல பரிக்ரமா

நோக்கம்6: விஷ்ராம் காட் தரிசனம் மற்றும் வழிபாட்டு முறைகளை பின்பற்றுவதால் கிடைக்கும் ஆன்மீக நன்மைகளை விளக்கும் மதுரா மஹாத்ம்யத்தின் குறிப்புகளை அடையாளம் காணுவது.

வேத மகிமைகள் (சாஸ்திரக் குறிப்புகள்)

பலன்கள் வேத சாஸ்திரச் சான்றுகள் (மதுரா மகாத்மியம்)
விஷ்ராம் காட்டைப் பார்ப்பதன் மூலம் முக்தி அடைகிறார்  MM 157
ஜன்மாஷ்டமியின் போது இங்கு நீராடுவது அனைத்து தவங்களுக்கும் தானங்களுக்கும் சமம் MM 164–165
இங்கு எள்ளும் நீரும் அர்ப்பணிப்பதன் புண்ணியத்தால் பித்ருக்கள் வைகுண்ட பதவியை அடைகின்றனர் MM 226
இங்கு ஸ்நானம் செய்வதனால் அனைத்து பாபங்களும் க்ஷணத்தில் அழிகின்றன; பக்தர்கள் மோட்சத்திற்கு தகுதியுடையவராவார் MM 227
இங்கு ஸ்நானம் செய்வதன் புண்ணியம் வேறு எங்கு பெறப்படும் புண்ணியத்தை விட கோடிக்கோடி மடங்கு மேம்பட்டதாகும் MM 231
இங்கு சிரசு முடி களைப்பதால் வருங்கால ஜன்மங்கள் அக்னியால் எரிந்தாற்போல் அழிகின்றன MM 236

நோக்கம்7: விஷ்ராம் காட்-ஐ அதன் நவீன முகவரி மற்றும் டிஜிட்டல் வரைபட கருவிகளின் உதவியால் புவியியல் ரீதியாக கண்டறிதல்.

இடம் : விஷ்ராம் காட், சௌபே பாரா, மதுரா, உத்தரப் பிரதேசம் 281001, இந்தியா

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare