15. கேசி படித்துறை

நோக்கங்கள்:
நோக்கம் 4: இந்த படித்துறைக்கு கேசி என பெயரிடப்பட்டதன் காரணத்தை புரிந்துகொள்ளுதல்.
நோக்கம் 6: கேசி என்பது அஹங்காரம் மற்றும் ஆணவத்தை பறை சாற்றுகின்றது எனும் அர்த்தத்தை அறிதல்.
நோக்கம் 7: இந்த லீலையில் மதுமங்களாவின் பங்கு மற்றும் அதன் பக்தி கலந்த இனிமை பற்றி விவரிக்க.
நோக்கம் 11: கேசி படிதுறையின் மகிமைகளை விவரித்தல்.
நோக்கம் 12: வ்ரஜ மண்டல பரிக்கிரமா பாதையில் கேசி படிதுறையின் முக்கியத்துவத்தை அறிதல்.
நோக்கம் 1: விருந்தாவனத்தில் உள்ள கேசிபடித்துறை இட அமைப்பு மற்றும் அதற்கான ஆன்மிக முக்கியத்துவம் பற்றி அறிதல்.
விருந்தாவனத்தில் அமைந்துள்ள யமுனை நதியின் அமைதியான கரையில், சீர் -படித்துறை (Chir-Ghat) என்பதற்குக் கொஞ்சம் கிழக்கே உள்ள கேசி படித்துறை என்பது, வ்ரஜத்தின் மிகப்புனிதமான, அழகான மற்றும் ஆன்மீக ரீதியாக ஆழமான தாக்கம் கொண்ட படித்துறைகளில் ஒன்றாகும்.
மிக அழகான ராஜஸ்தானி-வடிவ கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்ட அரண்மனைகள் இதை மேலும் அழகாக காட்டுகின்றன, மற்றும் பின்னணியில் மதன் மோகன் கோவிலின் உயரமான தோற்றம் இந்த இடத்திற்கு சௌந்தரிய தன்மையைக் கூட்டுகிறது.
சாஸ்திரங்கள் மற்றும் ஆச்சாரியர்களின் கூற்றுப்படி, இந்த படித்துறையில் யமுனை நதியின் நீரைத் தொடுபவர், நீராடுபவர், பார்ப்பவர் அல்லது முகர்பவர் கூட பெரிதும் தூய்மையடைகிறார்கள். கேசி என்ற அசுரனை கிருஷ்ணர் வென்றது என்றென்றும் எதிரொலிக்கும் புனிதமான இடம் இது.
நோக்கம் 2: ஸ்ரீகிருஷ்ணர், தமது அற்புதமான தெய்வீக லீலையினால், கேசியன் எனும் கொடிய அசுரனை வதம் செய்த சம்பவத்தை பற்றி அறிந்து கொள்ளுதல்.
குதிரை வடிவிலான கேசி என்ற அசுரனை கிருஷ்ணர் வதம் செய்தது:

கிருஷ்ணரை அழிக்க தீவிரமாக முயன்ற கொடுங்கோன் கம்சன், மாய சக்தி கொண்ட கேசி என்ற அசுரனை அனுப்பினான். அவன் ஒரு அசுர வடிவம், தீப்போல் எரியும், பிரம்மாண்டமான குதிரை வடிவத்தை ஏற்றான். அவன் பாயும் வேகம் பூமியில் நடுக்கத்தை ஏற்படுத்தியது; அவன் கத்தும் சத்தம் வானில் முழங்கியது. “கேசி அசுரன் புயலைப் போல பாய்ந்தான்; அவன் குதிரைப் பாதங்கள் பூமியைப் பிளப்பது போல இருந்தது. அவன் கத்தும் சத்தம் வானில் முழங்க, மேகங்கள் குலுங்கின.” — ஸ்ரீமத் பாகவதம் 10.37
சந்திப்பு
ஒருநாள் கிருஷ்ணர், மதுமங்கள் உட்பட தனது கோபால நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கேசி, குதிரை போல பாய்ந்து காட்டுக்குள் நுழைந்தான். மகிழ்ச்சிக்காக கிருஷ்ணரைப் போலவே உடை அணிந்திருந்த மதுமங்களைப் பார்த்து, அவன் கிருஷ்ணர் என நினைத்து தாக்கினான். அச்சமடைந்த மதுமங்கள் உதவி கூச்சலிட, உடனே கிருஷ்ணர் வந்து, அமைதியாக அவன் கால்களைப் பிடித்து மிகுந்த தூரம் சுற்றி எறிந்தார். கடும் கோபமடைந்த கேசி மீண்டும் பாய்ந்தான்; இந்த முறை அவன் வாயை பெரிதாக திறந்து கிருஷ்ணரை விழுங்கத் தயாரானான். கிருஷ்ணர் சிரித்தபடி, தமது தாமரை போன்ற கையை அவன் வாய்க்குள் நுழைத்தார். கேசியின் தொண்டையில், சிவந்த சூடான இரும்பு வைக்கப்பட்டதுபோல எரிச்சல் ஏற்பட்டது. கிருஷ்ணரின் கை பெரிதாக விரிந்து, அவன் பற்களை உடைத்து, மூச்சைத் திணறச் செய்து, உடலை உள்ளிருந்து பிளந்தது.
“பரமாத்மா தமது கரத்தை கேசியின் உடலுக்குள் விரித்து, அவனை முழுமையாக மூச்சுத்திணறச் செய்தார். கேசி இறந்தபின், தேவர்கள் மலர்களை பொழிந்து கிருஷ்ணரைப் புகழ்ந்தனர்.” — ஸ்ரீமத் பாகவதம் 10.37.8
நோக்கம் 3: இந்த லீலையின் பின், “கேசவ” என்ற திருநாமம் கிருஷ்ணருக்கு ஏன் வழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளுதல்.
இந்த நிகழ்வின் முடிவில், தேவ ரிஷி நாரதர் தோன்றி இவ்வாறு உரைத்தார்:
“நீ மிகவும் கொடூரமான அரக்கன் கேசியை அழித்ததினால், இனி வரும் நாட்களில் நீ அனைத்து உலகங்களிலும் ‘கேசவா’ என போற்றப்படுவாய் .” — ஹரிவம்ச புராணம், விஷ்ணு-பர்வா 24
அதனால் கிருஷ்ணர் கேசவா என அழைக்கப்படுகிறார் — இது வெற்றியின் மற்றும் பாதுகாப்பின் திருநாமம். பக்தர்களின் உள்ளும் புறமும் உள்ள தடைகள் மற்றும் அசுர சக்திகளை நீக்கும் கருணைமிகு பரமாத்மா அவர் என்பதை நினைவூட்டுகிறது
நோக்கம் 4: ‘கேசி படித்துறை ‘ என பெயரிடப்பட்ட காரணம்
கேசி அழித்தபோது, கிருஷ்ணனுடைய கை அந்த அரக்கனின் அழுக்கடைந்த மோசமான வாய் பகுதியுடன் நேரடியாக தொட்டதால், அவர் அந்தக் கையை சுத்தப்படுத்துவதற்காக யமுனை நதிக்கரையில் வந்தார் ; அக் குறிப்பிட்ட இடம்தான் “கேசி படித்துறை ” என பெயர்பெற்றது. அங்கு குளித்தால் அகங்காரம் மற்றும் பாவங்கள் நீங்கி பரிசுத்தமடைவோம் என்று கூறப்படுகிறது.
நோக்கம் 5: உயர்ந்த கேசி படித்துறையில் நீராடுவது, பிண்டம் அர்ப்பணம் செய்வது, தீர்த்தாடனம் செய்வதின் முக்கியத்துவத்தை அறிதல்.
ஆதி-வராஹ புராணம் (Adi-Varāha Purāṇa) கூறுகிறது:
“கேசி தீர்த்தத்தில் (கேசி படித்துறை) குளிப்பது கங்கையில் குளிப்பதை விட நூறு மடங்கு சுத்திகரிக்கும்.
விருந்தாவன மஹாத்ம்யத்தில் (Vrindavan Mahimāmṛta, VM 386):
இப்படித்துறையில் முன்னோர்களுக்குப் பிண்ட (piṇḍa) அர்ப்பணம் செய்தால், அது கயாவில் செய்யப்பட்டது போலவே பல பலன்களைத் தரும். தற்போது யமுனை நீர் குறைந்து விட்டபோதும், பக்தர்கள் தூசியால் மூடப்பட்ட படிக்கட்டுகளில் தலை வணங்கி , படித்துறையின் கல் தூண்களை தலையில் தொட்டு புனிதத்தை உணர்கிறார்கள்.
நோக்கம் 6: கேசி என்பது அஹங்காரம் மற்றும் ஆணவத்தை பறை சாற்றுகின்றது எனும் அர்த்தத்தை அறிதல்.
அடையாளம் (Symbolism):
கேசி – பெருமை மற்றும் ஆணவத்தின் பிரதிநிதி குதிரை-அசுரன் கேசி நம் ஆணவம் மற்றும் தற்பெருமை போன்ற அனர்த்தங்களின் (ego, spiritual pride) சின்னமாக கூறப்படுகிறது . அவன் வாய் — பெருமிதத்தின் நிழல் — கிருஷ்ணரின் தெய்வீக தலையீடு நடந்தது
இஸ்கான் விரஜவாசி விளக்கக்குறிப்பு:
“அகந்தையுள்ளவர்கள் தங்கள் நாவால் பெருமை பேசுகின்றனர். அதையே கிருஷ்ணர், அதன் மூலமாகிய வாயிலேயே நுழைந்து, அந்த அகந்தையை அடக்குகிறார்.” — இஸ்கான் வ்ரஜவாசி விளக்கம்
எப்படியோ கிருஷ்ணர் கேசி அசுரனின் அகந்தையை நொறுக்கினார், அதைப் போலவே அவர் நம்முடைய இதயங்களுக்குள் நுழைந்து, அறிவு அல்லது சேவையில் தோன்றும் வீண் பெருமை, அஹங்காரம் மற்றும் அகந்தையை அழிக்கிறார்.
நோக்கம் 7: இந்த லீலையில் மதுமங்களாவின் பங்கு மற்றும் அதன் பக்தி கலந்த இனிமை பற்றி விவரிக்க.
இந்த இடத்தின் இனிமையை மேலும் உயர்த்தும் ஒரு சிரிப்பூட்டும் சம்பவம் நிகழ்ந்தது:
ஒரு நாள், கிருஷ்ணர் தம் குழல், மஞ்சள் வஸ்திரம் மற்றும் மயிலிறகை மதுமங்களனுக்குக் கொடுத்து, “இவை உனக்கே” என்றார். மதுமங்களன் அவற்றை அணிந்து கொண்டு, கிருஷ்ணரைப் போல நடித்து, ஆடம்பரமாக நடந்து கொண்டான்.
அந்த நேரத்தில், கேசி அசுரன் அங்கே வந்தான். கிருஷ்ணரைப் போல அலங்கரித்து நின்றிருந்த மதுமங்களனைப் பார்த்தவுடன், அவன் கடும் கோபத்துடன் அவனை நோக்கி விரைந்து வந்தான்.
அதை கண்ட மதுமங்களன் பயந்தவனாக, சத்தமாகக் கத்தினான்: “ஆயிரம் லட்டு வேண்டாம்! என் உயிரை மட்டும் காப்பாற்று!” என்று.
உடனே கிருஷ்ணர் தம் நண்பனைப் பாதுகாத்து, கேசியை வதம் செய்தார். பின்னர் மதுமங்களன் தமக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களை திருப்பித் தந்து, நகைச்சுவையுடன் கூறினான்:
“லட்டு வேண்டாம்—என் உயிரே ஆயிரம் லட்டுக்களுக்கு சமம்!”
அதை கேட்ட கோபாலர்கள் அனைவரும் சிரித்தனர். இவ்வாறு, இந்தக் கடுமையான லீலையிலும் நகைச்சுவையும் இனிமையும் கலந்தன.
நோக்கம் 8: கேசி படித்துறை தரிசனத்தின் மாறுபாடான அணுகுமுறை பற்றிய ரூப கோஸ்வாமியின் உபதேசங்களைப் புரிந்துகொள்ளுதல்.
பக்தி-ரசாமிருத சிந்து கிரந்தத்தில், ஸ்ரீல ரூப கோஸ்வாமி எச்சரிக்கிறார்:
“நீங்கள் உங்கள் மனைவி, பிள்ளைகள் மற்றும் உலக வாழ்க்கையுடன் பற்றுக் கொண்டு இருக்க விரும்பினால், தவறுதலாக கூட கேசி படித்துறைக்கு ஒருபோதும் செல்லாதீர்கள். அங்கே கோவிந்தஜி தம் திரிபங்க நிலையுடன் நிற்கிறார். அவர் தரிசனமளிக்கும்போது, யாவரும் மயங்கிவிடுகிறார்கள். ஒருமுறை அவரை தரிசனம் செய்துவிட்டால், மீண்டும் உலக பந்தங்களுக்கு திரும்ப முடியாது.”
இந்த ஸ்லோகம் கேசி படித்துறை தரிசனத்தின் மாற்றைத்தை உருவாக்கும் சக்தியை வலியுறுத்துகிறது. அங்கே கிருஷ்ணர் மாயையிலிருந்து இதயத்தை விலக்கி, தெய்வீக சமாதியில் ஆழ்த்துகிறார்.
நோக்கம் 9: கேசி படித்துறையுடன் தொடர்புடைய குறிப்பிட்ட பக்தி பழக்கங்கள் மற்றும் பிரார்த்தனைகளை பற்றி அறிதல்.
கேசி படித்துறையில் பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனைகள்: “ஓ கேசவா! எப்படி நீர் கேசியின் அசுர அகந்தையை அழித்தீரோ, அதுபோல எனது அகந்தை, மாயை மற்றும் பொய்யான அஹங்காரத்தையும் அழித்தருளும். என்னை உம்முடைய சேவகர்களின் சேவகராக ஆக்குவாயாக.”
பக்தர்கள் செய்ய வேண்டிய செயல்கள்:
யமுனை நீரில் ஸ்நானம் செய்யுதல் அல்லது தலையில் சிறிது நீர் தெளித்தல்
ஜபம் செய்வது அல்லது கீர்த்தனம் பாடுதல்
கார்த்திகை மாதத்தில் மலர்கள் (புஷ்பம்) அல்லது நெய் விளக்குகள் சமர்ப்பித்தல்
அமைதியாக அமர்ந்து கிருஷ்ணரின் கருணை மற்றும் பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள்
சிறந்த தரிசன நேரம்:
பிரம்ம முகூர்த்தத்தில் (அதிகாலை)
கோவர்தன பௌர்ணமி, கார்த்திகை பௌர்ணமி, அல்லது ஏகாதசி ஆகிய நாட்களில்
நோக்கம் 10: “கேசி” படிதுறையில் உள்ள லக்ஷ்மி ராணி குஞ்ஜாவின் கட்டிடக்கலை மற்றும் பண்பாட்டு அம்சங்களை விவரித்தல்.
பரத்பூர் அரச குடும்பத்தினரால் கட்டப்பட்ட லக்ஷ்மி ராணி குஞ்ஜா மாளிகை, கேசி படிதுறையினை வளமான வளைவுகள், முற்றங்கள், தூண்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கிறது.மாளிகையின் அடியில் மறைந்துள்ள இடங்களில் சிந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்ட ஹனுமான் சிலைகள் காணப்படுகின்றன. பக்தர்கள் கற்களால் ஆன பாதையில் நடந்து, யமுனையில் மூன்று முறை ஸ்நானம் செய்கின்றனர் அல்லது அங்கு நிலவும் ஆன்மிக உணர்வை அனுபவிக்கின்றனர். கார்த்திகை மாதத்தில், ஆயிரக்கணக்கானோர் தீப-தானம் (விளக்கு அர்ப்பணம்) செய்வதால், இந்த படிதுறை மிகவும் ஆனந்தகரமாகவும் உயிர்த்துடிப்பாகவும் விளங்குகிறது.
நோக்கம் 11: கேசி படிதுறையின் மகிமைகளை விவரித்தல்
கேசி படிதுறை என்பது கிருஷ்ணர் கொடிய கேசி அசுரனை வதம் செய்த பின் ஸ்நானம் செய்த புனித இடமாகும். இது அகந்தையின் நாசம், யமுனையின் அருள், மற்றும் கிருஷ்ணரின் பிரேம லீலைகள் நடந்த இடம் என்பவற்றைக் குறிக்கிறது. “கேசவ” என்னும் நாமம் இங்கிருந்தே தோன்றியது; ஏனெனில் கிருஷ்ணரின் வெற்றிக்காக இங்கு அவர் மகிமைப்படுத்தப்பட்டார்.
“கேசி படிதுறையில் கிருஷ்ணரின் லீலைகளை நினைவுகூருவதன் மூலம், ஒருவர் பொய்யான அகந்தையிலிருந்து விடுபட்டு, நித்திய சேவைக்குத் தகுதியானவராகிறார்.”
— இஸ்கான் வ்ரஜ மண்டல பரிக்ரமா புத்தகம்
நோக்கம் 12: வ்ரஜ மண்டல பரிக்கிரமா பாதையில் கேசி படிதுறையின் முக்கியத்துவத்தை அறிதல்.
சிரா படிதுறையின் கிழக்குப் பகுதியில், யமுனை நதியின் கரையில் கேசி படிதுறை அமைந்துள்ளது. இது வ்ரஜ மண்டல பரிக்ரமா யாத்திரை மார்க்கத்தின் ஒரு முக்கிய இடமாகும். இங்கு கிருஷ்ணர் அகந்தையை வென்று, மற்றும் யமுனையைத் தூய்மை படுத்திய இடம் என்பதால், பக்தர்களால் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படுகிறது.

