5. Radha Madava Temple

நோக்கங்கள் :
நோக்கம் 1: ராதா விநோதா கோவிலின் இருப்பிடம் பற்றி அறிதல்.
நோக்கம் 2: லோகநாத கோஸ்வாமியின் பிறப்பு வரலாறு பற்றி தெரிந்துகொள்வது.
நோக்கம் 3: ஆன்மிக பாதையில் லோகநாத கோஸ்வாமி ஏன் சேர்ந்தார் என்பதை அறிதல்.
நோக்கம் 4: சைத்ன்ய மகாபிரபுவை தேடி லோகநாதர் மேற்கொண்ட முயற்சி பற்றி அறிதல்.
நோக்கம் 5: ராதா விநோதா விக்ரஹத்தின் வரலாறு பற்றி புரிந்துகொள்வது.
நோக்கம் 6: லோகநாத சுவாமியின் சமாதி பற்றி தெரிந்து கொள்வது.
நோக்கம் 7: ராஜஸ்தானில் இருந்து ஜெய்ப்பூருக்கு மூர்த்தி எப்படித் கொண்டு செல்லப்பட்டது என்பதை அறிதல்.
நோக்கம் 1: ராதா விநோதா கோவிலின் இருப்பிடம் பற்றி அறிதல்.
ராதா விநோதா கோவில் (அல்லது விநோதிலால் கோவில்) என்பது ராஜஸ்தானில் ஜெய்ப்பூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மதிப்பிற்குரிய கௌடிய வைஷ்ணவ திருத்தலமாகும். இது 295, திரிபோலியா பஜார், மோதிகானா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302002 என்ற முகவரியில் அமைந்துள்ளது. எளிய தோற்றத்துடன் இருந்தாலும் ஆன்மிக முக்கியத்துவமுடைய இந்த கோவில், ராதா மற்றும் கிருஷ்ணருக்கு, விநோதிலால் என்ற பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோவிலில் ஸ்ரீல லோகநாத கோஸ்வாமி தனிப்பட்ட முறையில் சேவை செய்த ராதா-கிருஷ்ண விகஂரஹஙஂகளஂ உள்ளன. மேலும், ஸ்ரீல லோகநாத கோஸ்வாமி, ஸ்ரீல விஷ்வநாத சக்ரவர்த்தி தாகுர் மற்றும் பலதேவ வித்யாபூஷணா ஆகிய உயர்ந்த பக்தர்கள் சேவை செய்த விகஂரஹஙஂகளுமஂ இங்கு உள்ளன.
ராதா விநோதா கோவில் என்பது திரிபோலியா பஜார் சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிறிய, எளிமையான அமைப்பாகும். இந்த கோவிலின் நுழைவுவழி மிகவும் சிறியதாக உள்ளது; 295 ஆம் எண்ணில் உள்ள ஹோஸ் கடையின் பக்கத்தில் உள்ள சில படிக்கட்டுகளால் குறிக்கப்பட்டுள்ளது..
இந்த எளிமையான தோற்றத்தினை மீறி, கோவில் ஆன்மிக பக்தியின் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. அமைதியான சூழ்நிலையைத் தேடி வருகிற பக்தர்களும் யாத்திரிகர்களும் இங்கு வழிபாடு மற்றும் தியானத்திற்காக வருகின்றனர்.
விநோதிலால் விகஂரஹமஂ சுமார் 30 செ.மீ உயரமுடையது, இது பகவான் கிருஷ்ணரின் தெய்வீகத் தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த கோவிலில் தினமும் பல ஆரத்திகள் நடைபெறுகின்றன: காலை 5:30, 7:00, 11:00, மாலை 6:00 மற்றும் இரவு 8:30. மேலும், பக்தர்கள் மாலை 4:30 முதல் இரவு 8:30 வரை தெய்வ தரிசனம் செய்யலாம்.
அருகிலுள்ள கோவில்களில் ராதா தாமோதர் கோவில், கோவிந்த தேவ்ஜி கோவில் மற்றும் ராதா கோபிநாத் கோவில் அமைந்துள்ளது .
இந்த கோவில், ராதா தாமோதர் கோவிலில் இருந்து நடக்கக்கூடிய தூரமான 10 நிமிடங்களில் அமைந்துள்ளது. திரிபோலியா பஜார் சாலையில் இருந்து இடது புறம் திரும்பி சுமார் 50 படிகள் நடக்கவும்; இடது புறத்தில் படிக்கட்டுகள் உள்ள இடத்தில் கோவில் நுழைவுவாயில் இருக்கும்.
நோக்கம் 2: லோகநாத கோஸ்வாமியின் பிறப்பு மற்றும் வரலாறு பற்றி தெரிந்துகொள்வது.
லோகநாத கோஸ்வாமி, ஸ்ரீ சைத்தன்ய மகாபிரபுவின் மிகவும் நெருங்கிய பக்தர்களில் ஒருவராக இருந்தார். அவர் நவத்வீபத்தில் நடந்த ஸ்ரீ சைத்தன்யரின் ஆனஂமீக செயலஂகளிலஂ கலந்துகொண்டார்.
அவரது தந்தையின் பெயர் பத்மநாபா, தாயின் பெயர் சீதாதேவி, மற்றும் அவரது ஒரே இளைய சகோதரர் பிரகல்பா என்பவர். அவர் மேற்கு வங்காள மாநிலத்தில் யஷோஹாரா மாவட்டத்தில் உள்ள தலாகாடி என்ற கிராமத்தில் வசித்தவர். அவர் ‘கோகுலானந்தா’ என்ற பெயரில் ஒரு கோவிலை நிறுவினார். ஸ்ரீல நாரோத்தம தாஸ் தாகுர் அவரின் ஒரே சீடர் ஆவார்.
நாரோத்தம தாஸ் தாகுர் லோகநாத கோஸ்வாமிக்காக ஒரு பிரணாம் மந்திரம் இயற்றியுள்ளார்:
ஶ்ரீமத் ராதா வினோதைக்க சேவா சம்பத் சமன் வித்தம்
பத்மனாபத்மஜம் ஸ்ரீமால் லோகநாத பிரபும் பஜே
“பத்மநாபரின் மகனான ஸ்ரீமத் லோகநாத ப்ரபுவின் திருவடிகளை நான் வணங்குகிறேன். அவர் ஸ்ரீ ஸ்ரீ ராதா விநோதரின் திருவடிகளில் மனம் மன ஒற்றுமையுடன் சேவை செய்யும் மனிதர்.”
நோக்கம் 3: ஆன்மிக பாதையில் லோகநாத கோஸ்வாமி ஏன் சேர்ந்தார் என்பதை அறிதல்.
இளமையிலிருந்தே ஸ்ரீ லோகநாதர் குடும்ப வாழ்வில் விருப்பமின்றி இருந்தார். ஒருநாள், தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு, வீட்டையும் நிரந்தரமாக விட்டு விட்டு, நவத்வீபத்தில் உள்ள மாயாபூருக்கு சென்று ஸ்ரீ கௌரங்கரின் திருவடிகளை தரிசித்தார். அகிலத்தில் கருணை வடிவாக அவதரித்த ஸ்ரீ கௌரங்க ஸ்வாமி, லோகநாத கோஸ்வாமியை பேரானந்த பூர்வமாகத் தழுவிக் கொண்டார். பின்பு, “விரைவாக விருந்தாவனத்துக்கு புறப்பட்டு செல்” என்று தமது திவ்ய ஆணையை அருளினார்.
ஆனால், லோகநாத கோஸ்வாமி, சில அறிகுறிகளின் மூலம் ஶ்ரீ சைதன்ய மகாபிரபு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீட்டை விட்டு வெளியேறி சன்னியாசம் எடுப்பார் என்பதை உணர்ந்தார். இதனால், அவர் மிகுந்த கவலையுடன் இருந்தார்.
ஶ்ரீ சைதன்ய மகாபிரபு, லோகநாத கோஸ்வாமியின் மனதையும் இதயத்தையும் புரிந்து கொண்டு, அவரை சாந்தப்படுத்தியபோது ,
“நாம் விருந்தாவனத்தில் மீண்டும் சந்திப்போம்.” என்று கூறினார்.
சைதன்யர், தமது நெருக்கமான துணையாளர்களான லோகநாத மற்றும் பூகர்ப கோஸ்வாமிகளுக்கு, விருந்தாவனத்தின் புனித ஸ்தலங்களைத் தேடி கண்டறியும்படி உத்தரவு வழங்கினார்.
இருவரும் பகவானின் ஸன்னிதியை விட்டு பிரிய விரும்பாததால், திடமாக மறுத்தனர்.
ஆனால் சைதன்ய மகாபிரபு அவர்களைத் தாழ்மையுடன் சமாதானப்படுத்தி, விருந்தாவனத்திற்கு செல்ல ஊகஂகமூடஂடினாரஂ.
இதனால், லோகநாதரும் பூகர்பரும், வங்காளத்தில் உள்ள நவத்வீபத்திலிருந்து வ்ருந்தாவனத்துக்கு பயணித்தார்கள்.
நோக்கம் 4: சைதஂனஂய மகாபிரபுவை தேடி லோகநாதர் மேற்கொண்ட முயற்சி பற்றி அறிதல்.
இதற்குப் பிறகு, லோகநாதர் மீண்டும் ஒருபோதும் இல்லற வாழ்க்கைக்கு திரும்பவில்லை. மாறாக ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பிரிவை தாங்கமுடியாத வலியில், ஒரு புனிதத் தலத்திலிருந்து மறுபுனிதத் தலத்துக்கு அலைந்து திரியத் தொடங்கினார். இவ்வாறு பல திவ்ய ஸ்தலங்களை தரிசித்து வந்தபின், இறுதியில் அவர் விருந்தாவன தாமத்துக்கு வந்தடைந்தார்.
இந்தக் காலத்தில், ஶ்ரீ சைதன்ய மகாபிரபு சன்னியாசம் எடுத்து ஜகந்நாதபுரிக்கு சென்றார். புரியில் சிறிது காலம் தங்கிய பின்பு, உள்ளங்களை உயர்த்தும் நோக்கில், அவர் தென்னிந்தியாவில் பயணம் செய்யத் தீர்மானித்தார்.
இந்தக் காலத்தில், ஶ்ரீ சைதன்ய மகாபிரபு சன்னியாசம் எடுத்து ஜகந்நாதபுரிக்கு சென்றார். பூரியில் சிறிது காலம் தங்கிய பின்பு, தாழ்ந்த உள்ளங்களை உயர்த்தும் நோக்கில், அவர் தென்னிந்தியாவில் பயணம் செய்யத் தீர்மானித்தார்.
பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபு தென்னிந்தியாவில் பயணிக்கிறார் என்பதைச் செய்தியாய் கேட்டு, ஶ்ரீ லோகநாதரும் அவரைக் காணும் ஆசையுடன் தென்னிந்தியாவிற்கு பயணித்தார்.
ஶ்ரீ சைதன்ய மகாபிரபு, தென்னிந்தியாவில் பல புனிதத் தலங்களைத் தரிசித்த பிறகு, மீண்டும் சில காலம் ஜகந்நாதபுரிக்கு திரும்பி தங்கி, பின்னர் விருந்தாவனத்துக்குப் புறப்பட்டார்.
இதைக் கேட்ட லோகநாத கோஸ்வாமி உடனே விருந்தாவனத்துக்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் சைதன்ய மகாபிரபு பிரயாகை தாமுக்கு செனஂறு இருந்தார். விருந்தாவனத்தை அடைந்து, மகாபிரபுவை காணாத லோகநாதர் வருத்தத்தில் மூழ்கினார். இதை சரிசெய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடன், அடுத்த நாள் காலைவேளையில் பிரயாகைக்கு புறப்படத் தயாரானார்.
அன்றிரவு, பிரபு கனவில் தோன்றி அவருக்குஆறுதல் கூறினார்:
“ஓ லோகநாதா, விருந்தாவனத்தில் தங்கவும்.
நான் என்னுடைய வாக்குறுதியை மீறவில்லை.
நான் ஏற்கனவே விருந்தாவனத்திற்கு வந்து விட்டேன்;
வேறொரு ரூபத்தில் இங்கேயே இருக்கிறேன்.
இவ்வாறே நீ எப்போதும் என்னுடன் உள்உணர்வில் இணைந்திருக்க முடியும்.”
சில நாட்களுக்கு பிறகு, ஶ்ரீல லோகநாத கோஸ்வாமி, ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் அன்புக்குரிய பக்தர்களாகிய ஶ்ரீ ரூபா, ஶ்ரீ ஸனாதனா, ஶ்ரீ கோபால பட்டா, ஶ்ரீ பூகர்பா மற்றும் பிறரை சந்தித்தார். அவர்களுக்கிடையே நிகழ்ந்த தெய்வீகமான ப்ரேம பரிமாற்றம் காண அழகாக இருந்தது! அவர்கள் அனைவரும் ஒரே மனதுடனும், ஒரே இதயத்துடனும் இருந்தார்கள். கோஸ்வாமிகள் அனைவருக்குள்ளும் ஶ்ரீ லோகநாதர் முதியவர். அவர்கள் அனைவருமஂ கிருஷ்ண ப்ரேமையில் முழுமையாக மூழ்கியிருந்தனரஂ.
நோக்கம் 5: ராதா விநோதர் மூர்த்தியின் வரலாறு பற்றி புரிந்துகொள்வது.
ஶ்ரீ லோகநாத கோஸ்வாமி, விருந்தாவனின் பன்னிரண்டு காடுகளிலும் பேரானந்தத்தில் சஞ்சரித்தார். அந்தக் காடுகளில் ஒன்றில் உமராவ் என்ற ஒரு கிராமம் உள்ளது. அங்கு அவர் ஒரு காலத்திற்கு கிஷோரி குநஂதா கரையில் தங்கினார். தெய்வீக வடிவத்திற்கு அர்ச்சனை செய்து, அந்த வழியாக கிருஷ்ணனுக்கு சேவை செய்வதற்கான பெரும் விருப்பம் அவருக்கிருந்தது. லோகநாதரின் இந்த சேவை ஆசையை உணர்ந்த கிருஷ்ணர், அவரிடம் நேரிலே வந்து, ஒரு அழகான விகஂரஹத்தை வழங்கி, “இந்த விகஂரஹத்தை இங்கே பூஜை செய்” என்று கூறினார். அந்த விகஂரஹதஂதினஂ பெயர் ராதா-விநோதர். அந்த அழகிய விகஂரஹத்தை வழங்கிய பிறகு, பகவான் திடீரென காணாமல் போனார். இதைக் கண்ட லோகநாத கோஸ்வாமி மிகுந்த கவலையில் ஆழ்ந்தார்.
அவரஂ கவலையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட ராதா-விநோதர் சிரித்துக் கொண்டு கூறினார்:
“நீ என்னை இங்கு ஏன் கொண்டு வந்தாய்? உன் விருப்பத்தை நிறைவேற்றவே நான் இங்கே நேரில் வந்துள்ளேன். என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய்? நான் இக்காட்டில், உமராவ் என்ற கிராமத்திற்கு அருகில் வசிக்கிறேன். நீ காணும் இந்த கிஷோரி குண்டத்தின் பக்கம்தான் என் வாசஸ்தலம். இப்போது எனக்காக எதையாவது உண்ண கொடு. சீக்கிரம்!”
லோகநாத கோஸ்வாமியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர் ப்ரேமத்தின் அலைகளில் மிதந்தார். இதற்குப் பிறகு, அவர் பகவானுக்கு உணவு அர்ப்பணம் செய்தார். புதிய வாழை இலை மீது நன்கு சமைத்த அரிசியை விகஂரஹதஂதிறஂகஂகு நிவேதனம் செய்து, பேரானந்தத்தில் ஆழ்ந்தார். பகவானின் அமுதமஂ போலத் தோன்றும் அழகைக் கண்டு மெய்மறந்து விட்டார்.
அதற்குப் பிறகு, அவர் மலர்களால் ஒரு மஞ்சத்தை அமைத்து, பகவானை படுக்கச் செய்தார். ஶ்ரீ லோகநாத கோஸ்வாமி அந்த இடத்தையே தமது இல்லமாக அமைத்துக் கொண்டார்.
அப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் மற்றும் ஆயர்கள், லோகநாத கோஸ்வாமிக்காக ஒரு பஜன் குடீர் (தியானம் செய்யும் குடில்) கட்ட விரும்பினார்கள். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். ராதாவிநோதா விக்ரஹத்தை பாதுகாக்கும் பொருட்டு, அவர் ஒரு துணிப் பையை தயாரித்து அதை எப்போதும் தனது கழுத்தில் தரித்திருந்தார்.
ஶ்ரீ ராதா-விநோதா, லோகநாத கோஸ்வாமியின் கழுத்தில் அணியும் ரத்தின மாலையைப் போல ஆனார். அந்த துணிப்பைதான் அவருடைய கோவிலாகும். இது லோகநாத கோஸ்வாமியின் நடைமுறையாக அவர் இந்த பூமியில் இருந்து மறையும் நாள்வரை தொடர்ந்தது; அவர் கடைப்பிடித்த கடுமையான வைராக்யத்திற்கான ஒரு உதாரணமாகும்.
நோக்கம் 6: லோகநாத சுவாமியின் சமாதி பற்றி தெரிந்து கொள்வது.
ஶ்ரீல லோகநாத கோஸ்வாமி, தனது வாழ்நாளின் வயோதிக கட்டத்தில், காயரா கிராமத்தில் அமைந்துள்ள கதிரவனத்தில் பஜனை செய்துகொண்டிருந்தபோது, தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டு பகவானின் நித்திய, லீலைகளில் இணைந்தார்.
அந்த இடத்தில் ஶ்ரீ யுகள குண்டா எனப்படும் ஒரு குண்டம் உள்ளது. அந்த குண்டத்தின் கரையில்தான் ஶ்ரீல லோகநாத கோஸ்வாமி சமாதியானாரஂ.
லோகநாதரின் திருவுடல் நீக்கத்திற்குப் பிறகு, மற்ற வைஷ்ணவர்கள் ராதா விநோதர் சேவையை தொடர்ந்தனர்.
நோக்கம் 7: ராஜஸ்தானில் இருந்து ஜெய்ப்பூருக்கு விக்ரஹம் எப்படி கொணஂடு
செலஂலபஂ பட்டது என்பதை அறிதல்.
11650களில், ஶ்ரீல விஷ்வநாத சக்ரவர்த்தி தாக்குர், அக்காலத்தில் கௌடிய சம்பிரதாயத்தின் தலைவராக இருந்து, விகஂரஹஙஂகளின் சேவையைப் ஏற்றுக்கொண்டார். அவர் தனது சீடர்களினஂ உதவியோடு, ராதா விநோதருக்காக ஒரு கோவிலை கட்டுவித்தார். அதே கோவிலில், அவர் தனது ராதா கோகுலானந்தா விகஂரஹங்களையும் நிறுவினார். அந்த கோவில் இன்றும் விருந்தாவனில் உள்ளது.
1670ஆம் ஆண்டில், ஔரங்கசீப்பின் தாக்குதலால் விருந்தாவனில் நிலவிய அபாயத்தினால், வைஷ்ணவ ஆச்சாரியர்களால் அர்ச்சிக்கப்பட்ட முக்கியமான கௌடிய விகஂரஹங்கள் —
ராதா கோவிந்ததேவ், ராதா விநோதா, ராதா தாமோதரா, ராதா விருந்தாவன்சந்திரா, ராதா கோபிநாத் மற்றும் ராதா மாதவா — இவை அனைத்தும் ராஜஸ்தானுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.
ஜெய்ப்பூரில், வைஷ்ணவ மன்னராகிய சவாய் ஜெய் சிங் அவர்கள், அந்த விகஂரஹங்களுக்காக பெரிய கோவில்களை கட்டினார்.

