3. ராதா தாமோதர் கோவில்

நோக்கங்கள்:

நோக்கம் 1: ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராதா-தாமோதர் கோவிலின் வரலாற்றுப் பின்னணியையும் அங்குள்ள விக்ரஹங்களையும் புரிந்து கொள்க.

நோக்கம் 2: ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராதா-தாமோதர் கோவிலின் ஸ்தாபனத்தைப் பற்றி அறிக.

நோக்கம் 3: விருந்தாவனில் ராதா தாமோதர் கோவில் நிறுவப்பட்டதையும், அங்குள்ள மூல விக்ரஹங்களின் பயணத்தையும் புரிந்துகொள்க.

நோக்கம் 1: ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராதா-தாமோதர் கோவிலின் வரலாற்றுப் பின்னணியையும் அங்குள்ள விக்ரஹங்களையும் புரிந்து கொள்க.


1733ஆம் ஆண்டு, மன்னர் சவாய் ஜெய் சிங்கின் ஆட்சி காலத்தில், ஸ்ரீ ராதா-தாமோதர் அர்ச்சா விக்ரஹங்கள் மற்றும் கோவர்தன ஶீலா விருந்தாவனத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்பட்டன. இது மொகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் மதவாதத் தாக்குதல் உச்சத்தில் இருந்த காலம். அந்தத் தீவிரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக பல தெய்வீக விக்ரஹங்கள் இந்தியாவின் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டன.

அக்காலத்தில் ஒரே சேவையாளராக இருந்த ஸ்ரீ நவல் லால் கோஸ்வாமி அவர்கள், இந்த அர்ச்சா விக்ரஹங்களை ஜெய்ப்பூரில் சௌரா ரஸ்தா பகுதியில் உள்ள ஸ்ரீ ஹிம்மத் ராம் நஸீர் அவர்களின் இல்லத்தில் (ஹவெலி) பிரதிஷ்டை செய்தார். இவ்விடம் தான் இப்போது, ஸ்ரீ ராதா-தாமோதர் கோவிலாக விளங்குகிறது.

டிரிபொலியா பஜார் சாலையிலிருந்து சௌரா ரஸ்தா சாலையில் 60 மீட்டர் (200 அடி) தூரத்தில் வலப்புறம் இந்தக் கோவில் அமைந்துள்ளது. ராதா-கோவிந்த கோவிலிலிருந்து இங்கு நடந்து வர சுமார் பத்து நிமிடங்கள் ஆகும். கோவில்களை எதிர்கொண்டு நின்றால், ராதா-தாமோதர் கோவில் இடப்புறத்தில் இருக்கும்; அருகில் இன்னொரு கோவிலும் உள்ளது.

முக்கிய பீடத்தில் இரண்டு தொகுப்புகள் அர்ச்சா விக்ரஹங்கள் உள்ளன. சிறிய தொகுப்பு, விருந்தாவனத்தில் ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி அவர்கள் வழிபட்ட மூல ராதா-தாமோதர் அர்ச்சா விக்ரஹங்கள் . அவர்களின் இடப்புறத்தில் ஸ்ரீ சனாதன கோஸ்வாமி வழிபட்ட கோவர்தன ஶீலா உள்ளது. முக்கிய பீடத்தின் இடப்புறத்தில் தனி பீடத்தில் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் பிரஹ்லாத மகாராஜா அர்ச்சா விக்ரஹங்கள் உள்ளனர்—பிரஹ்லாத மகாராஜாவை நன்கு கவனித்தால் மட்டுமே காண முடியும். இந்தக் கோவிலில் ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை வர்ணிக்கும் அழகிய ஓவியங்களும் காணப்படுகின்றன.

நோக்கம் 2: ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராதா-தாமோதர் கோவிலின் ஸ்தாபனத்தைப் பற்றி அறிக

விருந்தாவனில் உள்ள ராதா தாமோதர் கோவில், 1542ஆம் ஆண்டில் ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னாளில், மொகலாயர் ஔரங்கசீப்பின் படையெடுப்பினால், அங்கிருந்த பெரிய மூல விக்ரஹங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டன. பின்னர், 1739ஆம் ஆண்டு அவை விருந்தாவனுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டன.

தற்போது ஜெய்ப்பூரில் உள்ள ராதா தாமோதர் கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விக்ரஹங்கள் ப்ரதிபா விக்ரஹங்கள்(அல்லது பிரதிநிதி விக்ரஹங்கள்) என கருதப்படுகின்றன. ஸ்ரீ ரூப கோஸ்வாமியால் கையால் செதுக்கப்பட்ட தாமோதரரின் மூல , சிறிய விக்ரஹங்கள் இன்றும் ஜெய்ப்பூர் ராதா தாமோதர் கோவிலில் உள்ளன.

நோக்கம் 3: விருந்தாவனில் ராதா தாமோதர் கோவில் நிறுவப்பட்டதையும், அங்குள்ள மூல விக்ரஹங்களின் பயணத்தையும் புரிந்துகொள்க.

விருந்தாவனில் ஸ்தாபனம்:

விருந்தாவனில் உள்ள ராதா தாமோதர் கோயில் ஜீவ கோஸ்வாமியால் 1542 ஆம் ஆண்டில் சேவா குஞ்சில் நிறுவப்பட்டது.

ஜெய்ப்பூருக்கு தற்காலிக மாற்றம்:

விக்ரஹங்களை அழிக்கும் கொள்கைகளுக்காக அறியப்பட்ட முகலாய பேரரசன் ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது, மூல ராதா தாமோதர் விக்ரஹங்கள் உட்பட விருந்தாவனில் இருந்து பல விக்ரஹங்கள் பாதுகாப்பிற்காக ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டன.

விருந்தாவனுக்குத் திரும்புதல்:

விருந்தாவனில் நிலைமை மிகவும் உகந்ததாக மாறிய பின்னர், மூல ராதா தாமோதர் விக்ரஹங்கள் 1739 ஆம் ஆண்டில் மீண்டும் விருந்தாவனுக்கு கொண்டு வரப்பட்டன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare