6. கனக விருந்தாவனம்

நோக்கங்கள்:

நோக்கம் 1: கனக் விருந்தாவனின் இருப்பிடத்தை புரிந்து கொள்ளுதல்

நோக்கம் 2: கனக் விருந்தாவனுடன் தொடர்புடைய முக்கிய புனித இடங்களைப் பற்றி அறிந்து கொள்வது.

நோக்கம் 3: கனக் விருந்தாவனின் கட்டிடக்கலையைப் பற்றி அறிந்து கொள்வது.

நோக்கம் 1: கனக் விருந்தாவனின் இருப்பிடத்தை புரிந்து கொள்ளுதல்.

கனக் விருந்தாவன் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மிக அழகான பூஙஂகாவாகும். இது ஆரவல்லி மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் கட்டப்பட்டு, நஹர்கர் மலையின் அடிவாரத்தில் அமைந்த அமெர் கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ளது. இந்த இடம் ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் வடக்கில் உள்ளது. இந்த பூஙஂகாவிறஂகு அருகில் அமெர் கோட்டை அரண்மனை, ஜெய்கர் கோட்டை மற்றும் நஹர்கர் கோட்டை போன்ற பல சுற்றுலா இடங்களும் உள்ளன, மேலும் இவை அனைத்தும் செழிப்பான பசுமையால் சூழப்பட்டுள்ளன.

நோக்கம் 2: கனக் விருந்தாவனுடன் தொடர்புடைய முக்கிய புனித இடங்களைப் பற்றி அறிந்து கொள்வது

இந்த பூஙஂகா சுமார் 275 ஆண்டுகளுக்கு முன் ஜெய்ப்பூரின் கச்வாஹா ராஜபுத்திர மஹாராஜா சவாய் ஜெய்சிங்கால் நிறுவப்பட்டது. இநஂத இடமஂ உண்மையான விருந்தாவன் பூங்காவைப் போனஂறே உள்ளதாலஂ “விருந்தாவன்” என்ற வார்த்தை இங்கே சேர்க்கப்பட்டிருகஂகிறது, மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவிறஂகு அருகில் ராச லீலை நிகழ்த்திய விருந்தாவனைப் போன்ற தோற்றம் கொண்டதாலுமஂ, மகாராணி கனக்தேவியின் நினைவாலும் (“கனக்” என்ற வார்த்தை மஹாராஜாவின் பெரிய மகாராணி கனக்தேவி என்ற பெயராலஂ வந்தது) இந்த பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த பூஙஂகா விருந்தாவன் பள்ளத்தாக்குக்கு ஒப்பிடப்படுகிறது. இங்கு மஹாராஜா, பகவான் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலை கடஂடி அதற்கு ஸ்ரீ கோவிந்த தேயோஜி வளாகம் என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

இந்த பூஙஂகாவில் அநேக நீரூற்றுகளுமஂ, நுணுகஂகமான வேலைப்பாடுகள் மிகுந்த பல பளிஙஂகு தளஙஂகளுமஂ அறஂபுதமாக நிறுவபஂபடஂடுளஂளன. இது ராஜஸ்தான் அரசால் பராமரிக்கப்படுகிறது.

மஹாராஜா அஸ்வமேத யாகத்தைத் நடத்த திட்டமிட்டு, அனைதஂது புனித நதிகளிலிருந்து நீரைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தார். அதே நேரத்தில் ஸ்ரீகோவிந்த தேயோஜி கிருஷ்ணரஂ கோயிலும் இஙஂகே கட்டப்பட்டது.

நோக்கம் 3: கனக் விருந்தாவனின் கட்டிடக்கலையைப் பற்றி அறிந்து கொள்வது

கனக் விருந்தாவன் தோட்டம் நஹர்கர் மலைக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது மரங்கள் மற்றும் பசுமையான புல்வெளியால் நிரம்பியுள்ளது. கோவிந்த தேவ்ஜி கோவிலின் சுவர்கள், நுணுக்கமான சட்ட்ரிகள், கண்ணாடி அலங்காரங்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன; மேலும், தொடர்ச்சியான நீரூற்றுகளின் அமைப்பு இதற்கு சிறப்பை கூட்டுகிறது.

இந்த பூஙஂகாவினஂ முக்கிய பகுதி எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு முக்கிய வட்ட வடிவ நீரூற்று உள்ளது, இதன் பெயர் ‘பரிக்ரமா’ (வட்டமாக வலம் வருதல்). இது ஒரே பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள கர்ப்பக்கிரகம் கோவில் வளாகத்தில் (பரிசாரஂ) அமைநஂதுளஂளது, மேலுமஂ வித்தியாசமான வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த பூஙஂகா அனைத்து பருவங்களிலும் பசுமை கொண்டது. இங்கிருந்து ஜெய்ப்பூர் மற்றும் அருகிலுள்ள அமெர் கோட்டை மற்றும் தர்பாவதி நதி போன்ற இடங்களைக் காணலாம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare