7. இஸ்கான் ஜெய்ப்பூர் – ஸ்ரீ ஸ்ரீ கிரிதாரி தௌஜி கோவில்

நோக்கங்கள்:
நோக்கம் 1: இஸ்கான் கோவில்களின் வரலாறு மற்றும் நோக்கம், குறிப்பாக ஜெய்ப்பூரில் உள்ள கோவில் பற்றி அறிதல்
“இஸ்கான் கோயில்கள் 1966ஆம் ஆண்டு உலகின் பல பகுதிகளில் ஸ்ரீல ப்ரபுபாதர் அவர்களால் நிறுவப்பட்டன. கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் செய்திகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில், ஸ்ரீகிருஷ்ணரின் கோயில்களை அவர் நிறுவினார்.”
ஸ்ரீலபிரபுபாதா அவர்களால் உலகின் பல பகுதிகளில் நிறுவப்பட்டது.
இது கலியுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திகளை உலகளவில் பரப்பும் நோக்கத்தில் அவர் நிறுவிய கோவில்கள் ஆகும்.
ஜெய்ப்பூரில் உள்ள இஸ்கான் கோவில், அதன் அழகிற்காக ராஜஸ்தானில் மிகவும் பிரபலமானது.இந்த கோவிலின் அதிசயமான அழகால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க வருகின்றனர். மேலும் அவர்அருளிய ஞானத்தைப் பெறுகின்றனர்.
இந்த கோவிலுக்குள் நுழைந்த உடனேயே பக்தர்களுக்கு ஒரு அற்புதமான அமைதி மற்றும் உற்சாகம் ஏற்படுகிறது.
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ராதா-கிருஷ்ணர் விக்ரகங்கள் மிகவும் அழகாக அமைந்துள்ளன; மேலும் பக்தர்களின் மனதை ஈர்க்கிறது.
இதேபோல், கோவில் நிர்வாகத்தின் சார்பில் இங்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
நோக்கம் 2: ஜெய்ப்பூரில் உள்ள இஸ்கான் கோவிலின் சிறப்பு அம்சங்கள், எதனால் அனைவரையும் ஈர்க்கிறது என்பதைப் பற்றி அறிதல்
ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள இஸ்கான் கோவில் மிகவும் முக்கியமான ஒரு புனித ஸ்தலமாகும். இது இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த கோவிலின் வரலாறு 1970-களுக்கு செல்லும்; அப்போது இராஜா மகேந்திர சிங் அவர்களால் நிலம் தானமாக வழங்கப்பட்டு, அனைத்து சமூகத்தினரும் ஒரு பேதமின்றி தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் இடமாக இந்த கோவில் கட்டப்பட்டது.
இந்த கோவிலை பார்வையிட வேண்டிய முக்கிய காரணம் என்னவெனில் – இது ஒரு அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் ஒன்றாக இணைந்து, கடவுளின் மீது உள்ள அன்பை பகிர்ந்துகொள்ளும் இடமாக உள்ளது. இது போன்ற அனுபவத்தை மற்ற எங்கும் பெற முடியாது.
நோக்கம் 3: இந்திய கலாசாரத்தையும் மரபுகளையும் பிரதிநிதிக்கின்ற இடமாக இஸ்கான் கோவில்களின் முக்கியத்துவம்.
இஸ்கான் கோவில்கள் இந்தியாவில் அமைதியை தேடும் இடமாக உள்ளன. அவை ஒரு ஆன்மீக அனுபவத்தை வழங்குகின்றன மற்றும் அவற்றின் மரபு மற்றும் கலாசார தன்மையால் தனிப்பட்டவை.
இந்தியாவில் உள்ள இ்ஸ்கான் கோவில்களை பார்வையிடுவது, வேறுபாடு இல்லாத சூழலில் நாட்டின் கலாசாரத்தை அனுபவிக்கும் ஒரு அரிய வாய்ப்பாகும்.
இந்து மதம் பெரும்பாலும் ஒருசிலருக்கே உரியதாக பார்க்கப்படுகிறது, ஆனால் ஹரே கிருஷ்ணா கோவில் போன்ற இடங்கள் அனைவரையும் உள்ளடக்கியவை; உங்கள் மதம் எதுவாக இருந்தாலும், இங்கு அனைவருக்கும் அனுமதி உண்டு.
ஆன்மீக விழிப்புணர்வு உள்ளவர்களுக்கு, இந்திய மரபுகள் மற்றும் கலாசாரத்தை ஆராயும் ஒரு வாய்ப்பையும், அமைதியையும் இஸ்கான் கோவில்கள் வழங்குகின்றன.
நோக்கம் 4: இந்திய கோவில்களுக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், உடை நடைமுறை, நடத்தைகள் மற்றும் புகைப்படம் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் பற்றி புரிந்து கொள்வது
ஒருவர் இந்திய கோவிலுக்கு முதன்முறையாக செல்லும் போது, அது ஒரு குழப்பமாகவும் பயமுறுத்தும் அனுபவமாகவும் இருக்கக்கூடும். அதனைச் சரியாக புரிந்துகொள்வதற்கான சில முக்கிய வழிகாட்டுதல்கள் உள்ளன:
- கோவிலுக்குள் நுழைவதற்கு முன் காலணிகளை கழற்றுவது வழக்கமாகும்.
- பெண்கள் தங்கள் தலையை புடவை அல்லது துப்பட்டாவால் மூட வேண்டும்.
- ஆண்கள் குர்தா-பைஜாமா அல்லது சட்டை-வைஸ்ட் கோட் அணியலாம்.
- பக்தர்கள் ஒரு வரிசையில் அமைதியாக நுழைய வேண்டும். வழியில் உள்ள எதையும் தொடக்கூடாது.
- கோவிலுக்குள் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் அது தெய்வத்திற்கு அவமரியாதை செய்வதாகக்கருதப்படுகிறது.
நோக்கம் 5: ஜெய்ப்பூரில் கிருஷ்ண-பலராமர் கோவில் நிறுவப்பட்டதற்கான தூண்டுதல் பற்றி அறிதல்
ஸ்ரீலபிரபுபாதா அவர்கள், ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்தஜி அவர்களின் வழிபாட்டை உலகமெங்கும் பரப்ப வேண்டும் எனக் கனவு கண்டார். மேலும், ஜெய்ப்பூரில் ஒரு அழகான கிருஷ்ணா-பலராமர் கோவில் அமைக்க வேண்டும் என்ற அவரது ஆவலையும் வெளிப்படுத்தினார். ஒரு கடிதத்தில் அவர் எழுதுகிறார்:
“எனவே, ஜெய்ப்பூரில் ஒரு கிருஷ்ணா-பலராமர் கோவிலை நாமே உருவாக்க விரும்புகிறேன். நான் ஒரு கிருஷ்ணா-பலராமர் கோவிலின் (விருந்தாவனில் உள்ள) படங்களின் நகல்களை தனியாக அனுப்புகிறேன். அங்கே ராதா கிருஷ்ணரும், கௌரநிதாயும் கூட இருக்கிறார்கள். எனது ஆசை என்னவெனில், ஜெய்ப்பூரில் உங்களிடம் ஏதேனும் நிலம் இருந்தால், அது போன்ற ஒரு கோவிலை கட்ட உதவ வேண்டும் என நினைக்கிறேன்.”
(13, July 1975)
இஸ்கான் ஜெய்ப்பூர் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள் பற்றி அறிதல்.
1991-ஆம் ஆண்டு, ஸ்ரீல பிரபுபாதாவின் கனவில் ஊக்கமடைந்து, இஸ்கான் ஜெய்ப்பூர் தனது பயணத்தைத் தொடங்கியது.
பின்னர், 2019-ஆம் ஆண்டு, கோவிலின் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று, ஜெய்ப்பூரில் ஒரு கிருஷ்ண-பலராமர் கோவிலை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீல பிரபுபாதாவின் ஆசை நிறைவேற்றப்பட்டது.
இன்றைய தினத்தில், இஸ்கான் ஜெய்ப்பூர், அவரது பக்தியின் சாட்சி ஆகவும் ஆன்மீக விழிப்புணர்வுக்கான ஒளிவிளக்ககவும் திகழ்கிறது.



நோக்கம் 6: கோவிலில் உள்ள ஸ்டெயின் கிளாஸ் (stained glass) ஓவியங்கள் உருவாக்கப்பட்ட கதையையும், கலைஞரின் தூண்டுதலையும், கோவிலுடன் அவரின் ஒத்துழைப்பையும் அறிதல்.

இந்தக் காரியம் 2006 முதல் 2018 வரை ஒரு நீண்ட பயணமாக நிறைவேறியது உலகில் எங்கேயும் ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் கண்ணாடி ஓவியங்களுடன் கூடிய கோவில் இல்லை…ஆஸ்திரேலிய ‘வண்ணக் கண்ணாடி ஓவியக்கலை கழகத்தின்’ தலைவர்கள் வந்தபோது, இந்தக் கலைப்பணி உலகத் தரத்தில் உள்ளதெனவும், உலகின் எந்த இடத்திலும் காணக்கூடிய தரத்துக்கு சமமானதெனவும் அவர்கள் தெரிவித்தனர். இது, இத்தகைய மரியாதையைப் பெற்ற முதல் இஸ்கான் கோவிலாகும்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து வருகை தந்த திரு. காலின் கிரீன்வுட் இந்த அற்புதக் கலையை உருவாக்கியவர் ஆவார். அவர் ஸ்ரீல பிரபுபாதரை முன்னம் ஒருமுறை சந்தித்து, கிருஷ்ணரின் லீலைகளை கண்ணாடி ஓவியமாகச் சித்தரிக்க வேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். ஆக்க்லாந்து இஸ்கான் கோவிலில் வேலை செய்தபோது, ஒரு மிகச் சிறப்பு வாய்ந்த கண்ணாடி ஜன்னலை உருவாக்கினார். அதன் பிறகு ஜெய்ப்பூருக்கு வந்து ஒரு உற்பத்தி நிலையத்தை நிறுவி, உள்ளூர் இளைஞர்களுக்கு கண்ணாடி ஓவியங்களை உருவாக்கக் கற்றுக் கொடுத்தார்.

நோக்கம் 7: வைகுண்ட வாசலின் காவலர்களான ஜெய மற்றும் விஜயர்களின் கதை மற்றும் அவர்கள் தசாவதாரத்துடன் உள்ள தொடர்பை அறிதல்.
தசாவதாரம் கதைகள், வைகுண்டத்தில் உள்ள ஜெய மற்றும் விஜய என்னும் வாசல் காவலர்களுடன் தொடங்குகின்றன.
அதன்பின் தசாவதாரங்களை குறிக்கும் பத்து ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்களில், ரத்தினக்கல் வடிவம் கொண்ட வண்ணமயமான கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒளியை நேரடியாக காட்டுவதால், ஒளிரும் கிறிஸ்டல் போன்ற தோற்றம் கிடைக்கின்றது.
ஒவ்வொரு ஜன்னலிலும் சுமார் மூவாயிரம் கண்ணாடித் துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது உண்மையில் ஒரு அற்புதமான கலைநயம், மிக்க மற்றும் மிகுந்த சிரமமும் நேரமும் எடுத்துக்கொள்ளும் வேலை.
நோக்கம் 8: ப்ரவசன் ஹாலில் காணப்படும் தெய்வங்கள் மற்றும் ஆன்மீக குருமார்கள், குறிப்பாக ஆறு கோஸ்வாமிகள் மற்றும் பஞ்ச தத்துவம் பற்றி அறிதல்
ப்ரவசன் ஹாலில், விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகள் உள்ளனர்:
● ஸ்ரீ ரூப கோஸ்வாமி
● ஸ்ரீ ஸனாதன கோஸ்வாமி
● ஸ்ரீ ரகுநாத பட்ட கோஸ்வாமி
● ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி
● ஸ்ரீ கோபால் பட்ட கோஸ்வாமி
● ஸ்ரீ ரகுநாத தாஸ் கோஸ்வாமி
அதன்பின், ஸ்ரீ ஜெகன்னாதர், பலதேவர், மற்றும் இடையில் மா சுபத்ரா ஆகியோரும் உள்ளனர்.
இறுதியாக, பஞ்ச தத்துவம்:
● ஸ்ரீ அத்வைத ஆசார்யா
● பிரபு நித்யானந்தர்
● ஸ்ரீ சைத்தன்ய மஹாபிரபு
● ஸ்ரீ கதாதரர்
● ஸ்ரீவாஸ் தாகூர்

நோக்கம் 9: ஸ்டெயின் கிளாஸ் ஜன்னல்களில் காட்சியளிக்கப்படும் கிருஷ்ண லீலைகள், குறிப்பாக காளிய மர்தன லீலை மற்றும் கோவர்த்தன லீலை பற்றிய விளக்கம்
கிருஷ்ண லீலைகள்
நாம் பரிக்ரமா பாதையில் நுழையும்போது, இருபுறத்திலும் விருந்தாவனக் காடுகளைக் காட்டும் இரண்டு ஜன்னல்கள் காணப்படும். தெற்கு புறத்தில் மூன்று ஜன்னல்களில் காளிய மர்தன லீலையும் மற்றும் வடக்குப் புறத்தில் மூன்று ஜன்னல்களில் கோவர்தன லீலைகளும் காணப்படுகின்றன
ஒவ்வொரு ஜன்னலும் ஸ்டீல் சட்டக்கட்டமைப்பில் முற்றிலும் பொருந்துமாறு மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது ஒவ்வொரு ஸ்டீல் சட்டமும், கல் அமைப்பில் முற்றிலும் பொருந்தும்படி மிகவும் துல்லியமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.


