23. சிவ கோரா
நோக்கங்கள்:
நோக்கம்1: சிவ கோராவின் இருப்பிடத்தை விவரிப்பது.
நோக்கம்2: ராதா-குண்டம் தொடர்பாக இராமேஸ்வர மகாதேவரின் பங்கை அடையாளம் காண்பது.
நோக்கம்3: சிவா கோரா என்ற பெயரின் பொருளை அறிவது.
நோக்கம்5: சிவ கோராவின் ஆன்மீக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
சிவ கோராவின் இருப்பிடம் மற்றும் பொருள்
நோக்கம்1: சிவ கோராவின் இருப்பிடத்தை விவரிப்பது
சிவ கோரா என்பது உத்தவ-குண்டத்திலிருந்து வரும்போது, ராதா-குண்டம் அமைந்துள்ள கிராமத்தின் நுழைவாயிலில், கிரிவலப் பாதையின் வலது புறத்தில் அமைந்துள்ள ஒரு புனித இடமாகும்.
நோக்கம்2: ராதா-குண்டம் தொடர்பாக இராமேஸ்வர மகாதேவரின் பங்கை அடையாளம் காண்பது.
ராதா-குண்டத்தின் அருகிலுள்ள ஏரியின் (புஷ்கரிணியின்), வலது கரையில், சிவபெருமானின் வணக்கத்திற்குரிய வடிவமான இராமேஸ்வர மகாதேவரின் சன்னதி உள்ளது. ராதா-குண்டத்தின், வடக்கு திசையின் பாதுகாவலராக அவர் மதிக்கப்படுகிறார், மேலும் பக்தர்கள் பாரம்பரியமாக புனித குண்டத்திற்குள் நுழைவதற்கு முன்பு பயபக்தியுடனும் தூய்மையுடனும் இங்கு மரியாதை செலுத்துகிறார்கள்.
நோக்கம்3: சிவா கோரா என்ற பெயரின் பொருளை அறிவது.
‘கோரா’ என்ற சொல்லுக்கு ஒரு புனித இடம் என்றும், ‘சிவன்’ என்ற சொல்லுக்கு ‘நரி’ என்றும் பொருள் கொள்ளலாம்.
சிவ கோராவுடன் தொடர்புடைய லீலைகள்
நோக்கம்4: பத்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள சிவ கோராவுடன் தொடர்புடைய லீலைகளைப் பற்றி அறிந்து கொள்வது.
பத்ம புராணத்தின் படி, சில உள்ளூர் குழந்தைகள் இந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பொந்தில் ஒரு பெண் நரியை சிக்கவைத்தனர்.பயத்தில் நரி பரிதாபமாக அழத் தொடங்கியது. நரியின் அழுகுரலைக் கேட்ட ராதாராணி, ராதா-குண்டத்தில் எந்த உயிரினமும் எந்த வகையிலும் துன்பப்படக் கூடாது என்று கூறி அதை மீட்க தனது தோழிகளை அனுப்பினார்.
பயந்துபோன குள்ளநரியை ராதாராணியிடம் அழைத்து வந்தனர் தோழிகள். அந்த நரி வருங்காலத்தில் தனது பணிப்பெண்களில் ஒருத்தியாக மாற ராதாராணி ஆசீர்வதித்தார். இந்த செயல் ராதாராணியின் எல்லையற்ற கருணை மற்றும் அனைத்து உயிரினங்களிடத்தும் அவர் காட்டும் அக்கறையை நிரூபிக்கின்றது.
ஆன்மீக முக்கியத்துவம்
நோக்கம்5: சிவ கோராவின் ஆன்மீக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
ஆன்மீக நுழைவாயில்: சிவ கோரா ஒரு புனித வாயிலாக செயல்படுகிறது, ராதா-குண்டத்தின் பக்தி மண்டலத்திற்குள் நுழைவதற்கு பக்தர்களின் மனதை தயார்படுத்துகின்றது.
பாதுகாப்பின் சின்னம்: அதன் இருப்பு சிவபெருமானின் பாதுகாப்பு மேற்பார்வையை வலுப்படுத்துகிறது, பக்தர்களை வரவேற்கிறது, மற்றும் அந்த இடத்தின் புனிதத்தை பாதுகாக்கிறது.

