8. ராச ஸ்தலி
நோக்கங்கள்:
நோக்கம்1: ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கோபிகைளுடன் ஆடிய ராச லீலையை அறிதல்.
நோக்கம்2: கோவர்தனத்தின் அருகிலுள்ள பிற ராச ஸ்தலிகளை அறிதல்.

ராச ஸ்தலி உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள விருந்தாவனம் என்ற புனித தலத்தில் உள்ளது. இது ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய லீலைகளுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டது.
நோக்கம்1: ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கோபிகைளுடன் ஆடிய ராச லீலையை அறிதல்.
ராச ஸ்தலி என்பது பகவான் கிருஷ்ணரின் நித்திய ராச லீலை நிகழும் புனித இடமாகும். இங்கு ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கோபிகைகளுக்கிடையிலான தெய்வீகமான அன்பின் உன்னத பரிமாற்றம் வெளிப்படுகிறது. இது ஆன்மீக ஆனந்தத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடாக விளங்குகிறது.
இந்தப் பகுதி கடம்ப மரங்களும் தமால மரங்களும் நிறைந்ததாகும். இங்கு, இன்றும், பண்டைய காலத்தைச் சேர்ந்த சில மரங்கள் உள்ளன. அவை ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய ராச லீலையின் அடையாளமாக வணங்கப்படுகின்றன.

ராச ஸ்தலியின் மரங்கள்:
இன்றும் ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீமதி ராதாராணியும் இரவு நேரங்களில் இத்தலத்திற்கு வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் போற்றும் வகையில் பலவிதமான பூஜைகள் மற்றும் வைபவங்கள் நடைபெறுகின்றன.
நோக்கம்2: கோவர்தனத்தின் அருகிலுள்ள பிற ராச ஸ்தலிகளை அறிதல்.
புகழ்பெற்ற ராச ஸ்தலி விருந்தாவனம் பகுதியில் இருந்தாலும், வ்ரஜவாசிகள் கூறும் பாரம்பரியக் கதைகளின்படி, கோவர்தனத்தின் அருகிலுள்ள சில வனங்களும், குளங்களும், ராச லீலை நிகழ்ந்த புனித ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் முக்கியமானவை, சுதல வனம் (அப்ஸரா குண்டின் அருகில்) மற்றும் சுதல குண்டம் ஆகும்.

சுதல வனம்:
இந்தச் சிறிய வனம், அப்ஸரா குண்டத்தின் வட கரையில் அமைந்துள்ளது. இங்கு கடம்ப மற்றும் தமால மரங்கள் அதிகமாக இருந்ததால், இங்கு ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் வசந்த கால ராச லீலைகள் நிகழ்ந்தன. பழமையான இந்த கடம்ப மற்றும் தமால மரங்களில் சில ஒன்றோடொன்று பின்னிப் பின்னி வளர்ந்திருப்பதை வ்ரஜவாசிகள்,ராதா-கிருஷ்ணரின் திவ்ய ஐக்கியத்தின் அழகிய அடையாளமாகக் கருதுகின்றனர்.

சுதல குண்டம்:
சுதல வனத்தின் ஆழமான பகுதியில் அமைந்துள்ள தனிமையான சிறிய குளமே சுதல குண்டம். இங்கு மயில்கள் தண்ணீர் குடிக்கவும், மர நிழலில் ஓய்வெடுக்கவும் வருகின்றன.
மேலும், ரத்ன குண்டத்தின் அருகிலும் ஒரு புனித ராச ஸ்தலி இருப்பதாக உள்ளூர் மரபில் கூறப்படுகிறது. அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகைகளுடன் ஆனந்தமாக நாட்டியம் ஆடியதாக வ்ரஜவாசிகள் விவரிக்கின்றனர்.
சாஸ்திர மேற்கோள்கள்:
ஸ்ரீல ரகுநாத தாஸ கோஸ்வாமி தமது ஸ்தவாவலியில் (கோவர்த்தனாஶ்ரய தசகம்) கோவர்தனத்தின் ராச ஸ்தலி பற்றி பின்வருமாறு பாடுகின்றார்:
“கோவர்தனத்தில் வசந்த கால ராச ஸ்தலி உள்ளது. அங்கு ஸ்ரீமதி ராதாராணி, மாதவனின் பிரியமானவள், தன் அழகிய சகிகளால் சூழப்பட்டு, பசுமையான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகில் ஜொலித்தார். அவரது கழுத்தில்,ஸ்ரீ கிருஷ்ணர் தன் கைகளால் சூட்டிய பூமாலைகளின் சுகந்தம் பரவியது. இப்படிப்பட்ட திவ்ய ராச லீலை நிகழும் கோவர்தனத்திடம் யாரேனும் சரணாகதி அடையாமல் இருக்க முடியுமா?”

