5. மாதா ஜஹ்னவா பைதக்
நோக்கங்கள்:
நோக்கம் 1: ஜானவ மாதாவின் ஆன்மீக அடையாளத்தைப் புரிந்துகொள்வது.
நோக்கம்2: ஜானவ மாதாவின் தலைமைப் பண்பைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
நோக்கம்3: ஜானவ மாதாவின் வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை அறிவது.
நோக்கம் 4: ஜானவ மாதாவின் தெய்வீக தரிசனத்தை குறித்து அறிவது.
நோக்கம் 5: ஜானவ மாதா சம்பந்தப்பட்ட பக்தி நடைமுறைகளை விவரிப்பது.
நோக்கம் 6: ஜானவ மாதா மறைந்த சம்பவத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் பற்றி அறிவது.
ஜானவ மாதாவின் ஆன்மீக அடையாளம்
நோக்கம் 1: ஜானவ மாதாவின் ஆன்மீக அடையாளத்தைப் புரிந்துகொள்வது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விருந்தாவன லீலைகளில் ஜானவ மாதா அவர்கள், ஸ்ரீமதி ராதாராணியின் இளைய சகோதரியான அனங்க மஞ்சரியாக காட்சி தருகிறார்.
கவிகர்ணபூரர் அருளிய கௌர- கணோதேச-தீபிகா-வில் (செய்யுள் 66) ஸ்ரீமதி ராதாராணியின் இளைய சகோதரியான அனங்க மஞ்சரி, ஸ்ரீநித்யானந்த பிரபுவின் அன்பு மனைவியான ஜானவ மாதாவாக அவதரித்தார் என கூறப்பட்டுள்ளது.
வைசாக சுக்ல நவமியில் (ஏப்ரல்-மே மாதங்களில் வளர்பிறை ஒன்பதாம் நாள்) ஜானவ மாதாவின் தோற்ற நாளாக கொண்டாடப்படுகிறது.
கௌடிய வைணவ சமூகத்தில் தலைமைப் பங்கு
நோக்கம் 2: ஜானவ மாதாவின் தலைமைப் பண்பைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
ஸ்ரீநித்யானந்த பிரபுவின் மனைவியான ஜானவ மாதா, ஸ்ரீநித்யானந்த பிரபுவின் மறைவிற்கு பிறகு, கௌடிய வைணவ சமூகத்தின் தலைமையை ஏற்றுக்கொண்டார். பக்தர்களுக்கு வழிகாட்டினார், பிரசங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார் மற்றும் கேதுரி பெருவிழா போன்ற முக்கிய திருவிழாக்களை ஏற்பாடு செய்தார். பக்தி-ரத்னாகரா (ஐந்தாம் அலை), விருந்தாவனத்தில் ஜானவ மாதாவின் வருகையையும், வைணவ சமூகத்தை ஒன்றிணைப்பதில் அவரது செல்வாக்கையும் விவரிக்கிறது.
ஜானவ மாதாவின் வரலாற்று முக்கியத்துவம்
நோக்கம் 3: ஜானவ மாதாவின் வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை அறிவது.
ராதா-குண்டத்திற்கு அருகிலுள்ள இந்தப் புனித இடம், கோவர்தனில் தங்கியிருந்த போது அவர் பஜனை பாடிய இடத்தைக் குறிக்கிறது. பெங்காலி மொழியில் “பைதக்” என்றால் அமர்ந்த இடம் அல்லது கூட்டம் என்று பொருள்.இங்கே இது பக்தி கூட்டங்களுக்கான புனித ஆசனத்தைக் குறிக்கிறது. பக்தி-ரத்னாகரா (ஆறாம் அலை), ஜானவ மாதா எவ்வாறு ராதா-குண்டம் மற்றும் வ்ரஜத்தில் உள்ள பிற புனித இடங்களுக்குச் சென்று, தனது இடத்தில் (பைதக்கில்) கீர்த்தனையும், பஜனையும் நிகழ்த்தினார் என்பதை விவரிக்கிறது.
தெய்வீக தரிசனமும் ஜானவ மாதா படித்துறையும்
நோக்கம் 4: ஜானவ மாதாவின் தெய்வீக தரிசனத்தை குறித்து அறிவது.
ஒருமுறை, ஜானவ மாதா விருந்தாவனத்திற்கு வந்தார். ஸ்ரீ ராதா-கோபிநாதரை தரிசனம் செய்தபோது, ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரஹம் சற்று சிறியதாக இருப்பதை உணர்ந்து, ஸ்ரீமதி ராதாராணி சற்று உயரமாக இருந்தால், தெய்வீக தம்பதிகள் இன்னும் அழகாக இருப்பார்கள் என்று நினைத்தார். மாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், ஜானவ மாதா தனது இல்லத்திற்குத் திரும்பினார்.
அன்றிரவு, கனவில், அவர் இருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு தமால் மரத்தடியில், ஜானவ மாதா ஸ்ரீ கோபிநாதரின் தெய்வீக தரிசனத்தைக் கண்டார், ஸ்ரீமதி ராதாராணியின் உயரமான விக்ரஹத்தை ஏற்பாடு செய்யுமாறு ஜானவ மாதாவிடம் பகவான் ஸ்ரீ கோபிநாதர் கேட்டார். ஸ்ரீமதி ராதாராணியிடமிருந்தும் அதே உத்தரவைப் பெற்றார். இந்த தெய்வீக வேண்டுகோளைத் தொடர்ந்து, பகவான் ஸ்ரீ கோபிநாத் விக்ரஹத்திற்கு மிகவும் பொருத்தமான விகிதத்தில் ஸ்ரீமதி ராதாராணியின் தெய்வீக திருவுருவத்தை உருவாக்க ஏற்பாடு செய்தார்.
அருகிலேயே “மா ஜானவ காட்” உள்ளது, அங்கு அவர் ராதா குண்டத்தில் புனிதநீராடினார்.



ஜானவ மாதா பைதக்கில் பக்தி நடைமுறைகள்
நோக்கம் 5: ஜானவ மாதா பைதக் சம்பந்தப்பட்ட பக்தி நடைமுறைகளை விவரிப்பது.
இது, குறிப்பாக கௌடிய துறவிகளின் வாழ்க்கையைப் பற்றிய ஸ்ரீ ஹரி-கதை நடைபெறும் இடமாகும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நிறுவிய முக்கிய நடைமுறைகளான கீர்த்தனை, பஜனை மற்றும் நாமசங்கீர்த்தனம் ஆகியவற்றையும் பக்தர்கள் இங்கு செய்கிறார்கள்.
கோவர்த்தன மலையுடன் தொடர்பு
இந்தத் தலம், வ்ரஜவாசிகளை பாதுகாக்க ஸ்ரீ கிருஷ்ணரால் தூக்கப்பட்ட புனிதமான கோவர்த்தன மலைக்கு அருகில் அமைந்துள்ளது.
வ்ரஜத்தில் வசிப்பவர்களைப் பாதுகாப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணரால் தூக்கப்பட்ட புனித மலைக்கு அருகில் இந்த இடம் உள்ளது. மனதில் கருணை மற்றும் எண்ணத்தில் தூய்மை பெற கோவர்த்தன கிரிவலம் செய்யும் போது பக்தர்கள் இந்த இடத்திற்கு (பைதக்கிற்கு) வருகை தருகிறார்கள்.
ஜானவ மாதாவின் மறைவு
நோக்கம் 6: ஜானவ மாதா மறைந்த சம்பவத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் பற்றி அறிவது.
ஜானவ மாதா இரண்டாவது முறையாக விரஜத்தின் காடுகளில் சுற்றுப்பயணம் செய்த பிறகு, விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கோபிநாத்தின் மாலை ஆரத்தியில் அனைத்து விருந்தாவன மூத்த வைஷ்ணவர்களுடன் கலந்து கொண்டார். அவர்கள் பகவான் ஸ்ரீ கோபிநாத்தின் தரிசனத்திற்காக காத்திருந்தபோது, திடீரென பகவான் ஸ்ரீ கோபிநாத்தின் திரை திறந்தது, பகவான் ஸ்ரீகோபிநாத், தானே ஜானவ மாதாவின் கையைப் பிடித்து தனது தெய்வீக அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மீண்டும் திரை மூடப்பட்டது. சிறிது நேரம் கழித்து, கூடியிருந்த வைஷ்ணவர்கள் திரைச்சீலையைத் திறந்தபோது, பீடத்தில் ஸ்ரீராதா-கோபிநாத் மட்டுமே நிற்பதைக் கண்டனர், ஜானவ மாதாவின் எந்தத் தடயமும் இல்லை. பின்னர், ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் வழிகாட்டுதலுக்கு இணங்க ஸ்ரீ அனங்க மஞ்சரியின் திருவுருவமும் பகவான் ஸ்ரீ கோபிநாத்திற்கு அருகில் திருநிலைப் படுத்தப்பட்டது. பகவான் ஸ்ரீ கோபிநாத்துடன் ஐக்கியமாகி ஜானவ மாதா இவ்வுலகை விட்டு நீங்கினார்.

