ஆதியுமாகி அனாதியுமாய்
(1)
ஆதியுமாகி அனாதியு மாய்
இந்த அகிலம் மெங்கும் நிறைந்தாயே
போதகம் இல்லாமல் ஆலம் தளிர் ளுள்ளே
பிள்ளையாகி உறைந்தாயே
(ரகுராமா-பரந்தாமா)
(2)
உன்தன் பதத்தை வேண்டித் தவம் செய்வார்கள்
இந்த உலகத்தி லே உள்ள ஞாயம்
எந்த பதத்தை வேண்டி நீ தவம் செய்யவந்தாய்
ஈதென்ன கண்கட்டு மாயம்
(ரகுநாதா-ஜகன்னாதா)
(3)
முலையானது மில்லை கர்பக்குறியுமில்லை
முளைத்தாயே – ஒரு தூணில் மலையாய்
உலகத்தோர் இறந்தான் பிறந்தான் என்பார்கள்
வாய்க்குண்டோ – என் வார்த்தை வீணில் வேனோ
(ரகு வீரா- ரணதீரா)
(4)
என்னை அறியாத அரக்கன் என்றாயே நீ
இரண்டு செய்த பிரிவேனோ
உன்னை நீதானும் அறியாயே சாமி நான்
உன்னை எப்படி அறி வேனோ
(ரகுராமா – பரந்தாமா)
(5)
காட்டுவானும் நீயே – காணுவானும் நீயே
கற்றாயே இந்திர ஜாலம்
போட்டு விட்டுத் தேடித் தவிப்பார் – போல்
தவிக்கிறாய் போதும் இந்த கோலம்
(ரகுநாதா – ஜகன் நாதா)
(6)
சூரிய காந்தம் தரும் தீபத்தைக் கொண்டந்த
சூரியனைப் பணிவது போல் அறியேன்
சூரியனே உன்தன்னை அனுக்ரஹம் கொண்டு
நான் அறிந்ததை சொல்வேன்
(ரகுவீரா – ரணதீரா)
(7)
எனது சாபந்தீர்த்தாய் அது போல சபரி
இங்கிருக் கிறவளைக் காண வேணும்
தனதவள் சொல்வாள் சும்மா இருந்தால்
ஒன்றும் சாதிக்க லாமோ சொல்லாய் காணும்
(ரகுராமா – பரந்தாமா)
(8)
திடமாயவள் சொன்ன படியே சுக்ரீவனைச்
சேரும் அவனுடனே கடல் போல்
வானரங்கள் வருமே ஜானகியை கணத்தில்
கொண்டு வர சொல்லு
(ரகுநாதா – ஜகன்நாதா)
(9)
தடுக்காமல் கேளாய் ஓர் சிற்றன் எட்டாளுக்குச்
சரியல்லோ அறியாயோ நீயே
திடுக்கென்று செய்யலாமோ பதராதே
காரியம் சிதராதென் வார்த்தை அறியாயோ
ரகுராமா – பரந்தாமா
ரகுநாதா-ஜகன்நாதா
ரகுவீரா – ரணதீரா
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே

