ஆடாது அசங்காது வா கண்ணா

ஆடாது அசங்காது வா கண்ணா (உன்)
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடுதே எனவே

ஆடலை காண தில்லை அம்பலத்திறைவனும்
தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார்

ஆதலினால் சிறு யாதவனே ஒரு மாமயில் இறகணி மாதவனே நீ

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை
செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே மயில்
பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே
பன்னிறு கை இறைவன் ஏறு மயிலொன்று தன்
பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே

பாடி வரும் அழகா உன்னை காண
வரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திரு நடனம்
கண் பட்டு போனால் மனம் புண்பட்டு போகுமே

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare