ஏகாதசி விரதத்தின் அறிவியல் முக்கியத்துவம்
(15 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் விரதம்)

ஏகாதசி நாட்களில் விரதம் அனுஷ்டிப்பது வலுவான அறிவியல் அடிப்படையைக் கொண்டுள்ளது. இது நிர்ஜல் அல்லது சஜல் எனப்படுகிறது.
சிலர் பழங்கள், காய்கறிகள், பால் போன்ற லேசான உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டுவிரதம் மேற்கொள்கிறார்கள்.
மேலும் சிலர் பருப்பு மற்றும் தானியங்களை முற்றிலும் தவிர்த்து (No Grains & Pulses) விரதம் கடைபிடிக்கின்றனர்.
பருப்பு மற்றும் தானியங்களை உட்கொள்ளாமல் இருப்பது, நமது செரிமான அமைப்பிற்கு (Digestive System) தேவையான ஓய்வை வழங்குகிறது. இது செரிமான அமைப்பில் சேரும் உணவு அசுத்தங்களை (Food Mess) சுத்தம் செய்ய உதவுகிறது.
ஏகாதசி விரத ( Materialistic/Bodily Benefits ) பலன்கள் பின்வருமாறு:
- நமது செரிமான அமைப்புக்கு(Digestive system) மிகவும் தேவையான இடைவெளி (Break ) கொடுக்கப்படுகிறது, ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், நாம் தொடர்ந்து விரதம் இருக்கும்போது அது மெதுவாக குறைகிறது.
- உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- இரத்த அழுத்தத்தை (Blood Pressure) பராமரிக்க உதவுகிறது.
- உடலில் உள்ள அழற்சிகளை (Inflammation) குறைக்க உதவுகிறது.
- மன நலத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- Endorphins எனப்படும் Feel Good Hormone உற்பத்தியை அதிகரிக்கிறது.
- கவலை (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) குறைய உதவுகிறது.
- கல்லீரல் (Liver) மற்றும் சிறுநீரகங்களின் (Kidney) செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
- உடலின் செல்களை (Cells) புதுப்பித்து நோய் எதிர்ப்பு சக்தியை (Immune System) அதிகரிக்கிறது.
எனவே, ஏகாதசி விரதத்தால் ஏற்படும் நேர்மறையான அறிவியல் பயன்களை புரிந்து கொண்டு,
நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்வோம்.
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே

