ராஜ-வித்யா ராஜ-குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரதயக்ஷாவகமம் தர்ம்யம் ஸு-ஸுகம் கர்தும் அவ்யயம்
இந்த அறிவு, கல்வியின் அரசனும், எல்லா இரகசியங்களிலும் மிக இரகசியமானதும், மிகத் தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால் இதுவே தர்மத்தின் பக்குவ நிலையாகும். இஃது அழிவற்றதும், பேரின்பத்துடன் செயலாற்றுப்படுவதும் ஆகும்.